முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல்: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024      இந்தியா
Koli 2023 04 11

Source: provided

சென்னை : கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில், வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பறவை காய்ச்சல் பரவலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து சுமார் ஒரு கி.மீ. சுற்றளவில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழக அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனையிட்டு கோழிகள் மற்ற பறவைகள் கொண்டு வரப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து