முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.

டெல்லி அரசின் கலால் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு சிறையில் இன்சுலின் வழங்குவதில்லை என கடந்த வெள்ளியன்று(ஏப். 19) பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் காரணமாக தனக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்திருந்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் இன்சுலின் வழங்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. டைப் -2 நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320-ஆக அதிகரித்த பிறகுதான் இன்சுலின் அளிக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இதனை அடுத்து 2 யூனிட்டுகள் இன்சுலின் ஊசி மூலம் கெஜ்ரிவாலுக்கு செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டதை திகார் சிறை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து