முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்: செல்வபெருந்தகையிடம் கடிதம் அளித்தார்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      அரசியல்
Mansoor-Ali-Khan-2024-04-25

சென்னை, சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை  சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளார். அப்போது அவர் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.  

இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். 

இந்த நிலையில், சென்னை சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நடிகர் மன்சூர் அலிகான் நேற்று சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன்.

நான் போட்டியிட்ட வேலூர் தொகுதியை தவிர, மற்ற இடங்களில் இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாகவும், பிரியங்கா காந்தி அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார்கள் என்ற எனது விருப்பத்தை ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். 

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட பிரதமர் மோடி நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் எதையாவது பேசி ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறார் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து