எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ,மார்ச் .24 - முதல்வர் ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சியில் காவல்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சென்னை மாநகராட்சிக்கு 87 ரோந்து வாகனங்களை வாங்குவதற்கும், பல்வேறு பணிகளைக் கவனிக்க 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் தஞ்சை மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் அலுவலகத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர் குடியிருப்புக்கும் புதிய கட்டடங்களைக் கட்டவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவல் துறை சீரமைப்பிற்காக புதிதாக ஆயிரம் கணினிகள் வாங்கவும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் நாற்காலிகள் போன்ற பொருட்கள் வாங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு நாடு வளம் பெறவேண்டும் என்றால் அந்த நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தான், அந்த நாட்டின் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ முடியும். நாட்டின் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார நிலை வளமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையினை உருவாக்குவதில் காவல் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையின் அதிநவீனமயமாக்கப்படுதலுக்காகவும், அந்த காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் நலன்களுக்காகவும், முதலமைச்சர் ஜெயலலிதா பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், சென்னை மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காவலர்களின் கண்காணிப்பு பணி இடைவிடாது இருக்க அதிக அளவு ரோந்து வாகனங்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு, 5 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 87 ரோந்து வாகனங்களை வாங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில், பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்; nullநீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கண்காணித்தல்; குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறை தனது பணிகளை மேலும் செம்மையாக செயல்படுத்த இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவை என்ற காவல்துறையின் கோரிக்கையினை ஏற்று, காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவுக்கு கூடுதலாக 1 காவல் துறை துணை ஆணையர், 2 காவல் உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர், 46 காவல் உதவி ஆய்வாளர், 10 தலைமை காவலர், 20 முதல் நிலை காவலர், 30 இரண்டாம் நிலை காவலர், 1 சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக 5 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 769 ரூபாயும், தொடரா செலவினமாக 86 லட்சத்து 61 ஆயிரத்து 335 ரூபாயும், ஏற்படும்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தஞ்சாவூரில் ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக் கட்டடம் தற்பொழுது மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூரிலுள்ள தமிழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் நடைபெறும் கிரிவலம் மற்றும் வருடந்தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவற்றிற்கு திரளாக பொதுமக்கள் வருகை தருகின்றனர். இச்சமயங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக வெளி மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ் விழாக்காலங்களில் காவல் பணிகளை மேற்கொள்ளும் காவலர்கள் நலன் கருதி, 11 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் 500 காவலர்கள் தங்குவதற்கான அளவில் காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையின் குற்றப்பிரிவு கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுத் துறையில் அறிவியல் பிரிவு ஒன்றினைத் துவக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பிரிவில் அறிவியல் அதிகாரி மற்றும் அறிவியல் உதவியாளர் ஆகிய இரு பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவர்கள், வழக்கின் முக்கியமான அம்சமான அறிவியல் சம்பந்தப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிக்கை அளிப்பார்கள். ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படையில் புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றக்கூடிய வகையில் நுட்பமான பயிற்சியை அளிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இடையில் கால அளவு குறைக்கப்பட்ட பயிற்சியினை மீண்டும் முன்பு இருந்தது போல் காவலர் உயர்ரக பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி அளிப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்வில் கணினி பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. எனவே, காவல் துறைக்கு தேவைப்படும் விவரங்களான குற்றங்களின் எண்ணிக்கை, குற்றவாளிகளின் செயல்பாடுகள், குற்றவாளிகள் பற்றிய விவரங்களை பராமரித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் கணினி செயல்பாடு பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே காவல்துறையின் பணி சிறக்க, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு 245 கணினிகள், மாவட்ட தலைமை காவல் அலுவலகங்களுக்கு 330 கணினிகள், சரக அலுவலகங்களுக்கு 60 கணினிகள், மண்டல அலுவலகங்களுக்கு 16 கணினிகள், மாநகர காவல் அலுவலகங்களுக்கு 70 கணினிகள், ஆயுதப்படை தலைமை அலுவலகங்களுக்கு 5 கணினிகள், ஆயுதப்படை சரக அலுவலகங்களுக்கு 10 கணினிகள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 64 கணினிகள், காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு 100 கணினிகள், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு 100 கணினிகள், என மொத்தம் 5 கோடி ரூபாய் செலவில் 1000 கணினிகள் வாங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலைய அன்றாடப் பணிகள் அனைத்தும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவைகள் ஆகும். அன்றாடம் காவல் நிலையங்களின் உதவியை நாடி வரும் பொதுமக்களை வரவேற்று அமர வைக்க பெரும்பாலான காவல் நிலையங்களில் நாற்காலிகள் கூட இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் வெகுநேரம் நின்று கொண்டே தங்கள் குறைகளை தெரிவிக்கின்ற நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முன் மாதிரியாக தமிழகத்திலுள்ள
1492 காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அமர்வதற்காக காவல் நிலையம் ஒன்றுக்கு 10 நாற்காலிகள் வீதம் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வகையில் அரசுக்கு 92 லட்சத்து 20 ஆயிரத்து 560 ரூபாய் செலவினம் ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது : குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்
02 May 2024அகமதாபாத் : பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.