எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.25 - 3 அரசு மறுவாழ்வு இல்லங்களை புதுப்பிக்க ரூ.5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது 6 வயதுக்குட்பட்ட பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் முதல் கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த 5 பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்திட 201112 ஆண்டிற்காக 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், மேலும் இதுபோன்ற பயிற்சி மையங்களை சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, ஈடு, கன்னியமாகுமரி, நாமக்கல், ராமநாதபுரம், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 20 மாவட்டங்களில் புதியதாக தோற்றுவிப்பதற்காக, மையம் ஒன்றுக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் வீதம், 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் பார்வையற்ற குழந்தைகள் நலனுக்காக 57 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அனுமதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், பார்வையற்ற குழந்தைகளை ஆரம்பநிலை பயிற்சி மையத்திற்கு அழைத்துவர மற்றும் திரும்ப அழைத்துச் செல்ல அக்குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் பயணச் செலவுத் தொகையினை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தற்பொழுது இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், பணிபுரியும்/சுய தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிடக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் செலவில் 400 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யப்படும். எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் காதொலிக் கருவிகளுக்குப் பதிலாக 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன்வாய்ந்த காதுக்கு பின்பகுதியில் அணியும் காதொலிக் கருவிகள் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு 6 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 1,000 மாணவ, மாணவியருக்கு இந்த திறன் மிக்க காதொலிக் கருவிகள் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 1 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
தமிழ்நாட்டில் தற்பொழுது 12 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்தினை ஏனைய 20 மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய தொழிற் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு 75 மாற்றுத் திறனாளிகள் வீதம் 2400 மாற்றுத் திறனாளிகளுக்கு இப்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 74 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தினையும், பொருளாதார நிலைமையையும் மேம்படுத்துவதற்காக தொடங்கும் தொழில்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் முலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் அதிகமான அளவில் முன்வந்து வங்கிகள் மூலம் கடன் பெற்று, சுயமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்காக வசூலிக்கப்படும் வட்டியினை முழுவதுமாக அரசே ஏற்றுக் கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழுநோயாளிகளை பராமரிக்கவும், அவர்களது நோயை குணப்படுத்தவும், அரசு 10 இடங்களில் மறு வாழ்வு இல்லங்களை அமைத்து பராமரித்து வருகிறது. இந்த இல்லங்கள் 38 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாலும், அவைகள் மோசமான நிலையில் இருப்பதாலும், அங்கு வசிக்கும் இல்லவாசிகள் மிகவும் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை, 1 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவிலும் யா.புதுப்பட்டி அரசு மறுவாழ்வு இல்லத்தை, 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும் ஆக மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் செலவில் 3 அரசு மறு வாழ்வு இல்லங்களை புதுப்பிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேற்கூறிய அரசின் இந்நடவடிக்கைகள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.