முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``ஈஸ்டர் திருநாள்'' முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 8 - ஈஸ்டர் திருநாளுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- அன்பின் திருவுருவாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களின் பாவம் போக்க சிலுவையில் அறையுண்ட இயேசுபிரான், அடுத்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த திருநாளே ஈஸ்டர் பெருவிழாவாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் எங்கிலும் உள்ள கிறிஸ்துவப் பெருமக்கள் மிகுந்த மனநிறைவோடும், மன மகிழ்வோடும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய வேளையில், உலகில் அமைதி நிலவவும், மனிதநேயம் தழைக்கவும், இயேசுபிரான் காட்டிய நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடு வாழவும் பிரார்த்தித்து, ஈஸ்டர் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்