முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியவாத காங். முக்கிய பிரமுகர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      அரசியல்
Image Unavailable

 

நாக்பூர்,ஏப்.15 - மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை நக்சலைட்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். நக்சலைட்களின் வெறிச்செயல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பரவத்தொடங்கிவிட்டது. கட்ரோலி மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜில்லா பரிஷத் உறுப்பினர் கெவல் அக்தம்வர் (43) என்பவரை நக்சலைட்கள் 4 பேர் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கெவல் சம்பவ இடத்திலேயே பலியானார். எடபல்லி தாலுகாவில் உள்ள தனது சகோதர் கடை அருகே உட்கார்ந்து பலருடன் கெவல் பேசிக்கொண்டியிருந்தார். அப்போது நக்சலைட்கள் சேர்ந்து 5 தடவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் கெவல் பலியானதோடு அவருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டியிருந்த பிரசாந்த் குகுல்வர்,லட்சுமி நாராயாணன் பர்வத்லாவர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுட்டுக்கொலை செய்யப்பட்ட கட்ச்ரோலி மாவட்ட தேசியவாத காங்கிரஸ் துணைத்தலைவராக இருந்தவர். கடந்த 3 மாதத்திற்குள் மகாராஷ்டிராவில் 2-வது அரசியல் படுகொலை நடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்