எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, ஏப் - 21 - நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் நிலையத்தில் எத்தனை நாட்களில் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், விஞ்ஞானிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்கும் நேற்று முன்தினம் இந்திய அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூடங்குளம் வந்தார். அவருடன் ரஷிய நாட்டைச் சேர்ந்த அணு உலை கட்டுமானம், கட்டமைப்பு நிறுவன தலைவர் லிமரன்கோ வலேரி மற்றும் ரஷிய உயர் விஞ்ஞானிகள் சிலரும் வந்து இருந்தனர்.நேற்று முன்தினம் அவர்கள் ஆய்வு செய்து முதல் அணு உலையில், மின் உற்பத்தி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ராதாபுரம் தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் அளித்தார்கள். அதில் உள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
விஞ்ஞானிகளுடன் எஸ்.கே.ஜெயின் நேற்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலை 5 மணி அளவில் அணுமின் நிலையத்தில் உள்ள கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு, ரஷிய விஞ்ஞானிகளுடன் கூட்டாக பேட்டி அளித்தார். பேட்டியின் போது எஸ்.கே.ஜெயின் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகளை தொடங்குவதற்கு தக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜப்பான் நாட்டில் புகுசிமா அணுஉலை விபத்து காரணமாக கூடங்குளம் பகுதி மக்கள் அச்சமடைந்து திடீர் போராட்டத்தை தொடங்கினர். அந்த போராட்டத்துக்கு முன்பே மாதிரி எரிபொருளை நிரப்பி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெப்பநீர் பரிசோதனை ஓட்டம் நடத்தி இருந்தோம்.
இந்த நிலையில், கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் காரணமாக 6 மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் அணு உலை முடங்கிக் கிடந்தது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த காலதாமதத்தால் அணு உலையில் உள்ள அனைத்து கருவிகளும் முன்புபோல் சரியாக வேலை செய்கிறதா? என்பதை மறுபரிசோதனை செய்து பார்த்தோம். இந்த சோதனையும் 95 சதவீதம் வரை முடிந்துவிட்டது.
அடுத்தக்கட்டமாக கோர் கூலிங் சிஸ்டம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். இதனை ஒருங்கிணைந்த அணு உலை குளிரூட்டும் சோதனை என்று கூறுவார்கள். ஒரு வாரத்தில் இந்த சோதனையை நடத்த இருக்கிறோம். அதன் பிறகு, இந்திய அணு மின்சார ஒழுங்குமுறை வாரியத்துக்கு அறிக்கை அனுப்புவோம். ஏற்கனவே வெப்பநீர் சோதனை குறித்தும் அறிக்கை அனுப்பி இருக்கிறோம்.
இந்த அறிக்கைகளின்படி அணுமின்சார ஒழுங்குமுறை வாரியம் முறையான ஒப்புதலை அளிக்கும். அதன் பின்னர் அணு உலையில் நிரப்பப்பட்டு இருக்கும் மாதிரி எரிபொருளை அகற்றிவிடுவோம். பின்னர் யுரேனியம் எரிபொருளை நிரப்புவோம்.
யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும். அதன் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது இன்னும் 2 மாதங்களில், அதாவது ஜூன் மாதம் கடைசியில் அல்லது ஜூலை மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பிலும், இப்பகுதி மக்களின் பாதுகாப்பிலும் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். நாட்டு மக்களின் நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. கூடங்குளத்தில் சுனாமி, நில அதிர்வு போன்றவை ஏற்பட்டாலும் அணு உலைக்கு எந்த பாதிப்பும் வராது. புகுசிமா அணு உலையைவிட பலமடங்கு நவீன வசதிகளுடன் இந்த அணு உலை உள்ளது.
சமீபத்தில் இந்தோனேசியா கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் நில அதிர்வு இருந்தது. ஆனால், கூடங்குளத்தில் மிகச்சிறிய நில அதிர்வு கூட இல்லை. இதுதான் உண்மை.
கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகளை அமைப்பது பற்றியும் நாங்கள் ஆலோசித்து உள்ளோம். நீரியியல், நிலவியல், கடலியல் குறித்து பல்வேறு உயர்மட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்திய பின்னர்தான், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அவை பற்றி எந்த சந்தேகமும் அடைய தேவையில்லை.
கூடங்குளம் பகுதி மேம்பாட்டுக்காக ஏற்கனவே அணு மின்சார கழகம் சாலை, குடிநீர் வசதிகளையும், பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்கும் உதவி செய்து உள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதியும் ஒதுக்கீடு செய்து உள்ளன. தகுந்த வளர்ச்சி திட்டங்களுக்காக எங்களிடம் நிதி கேட்டால் இன்னும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
மக்களுக்கு விரைவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்போம். ஒருவேளை விபத்து ஏதும் ஏற்பட்டால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கேட்கிறீர்கள்? அப்படி ஏதும் ஏற்பட்டால் மாவட்ட கலெக்டருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும். மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அணுமின் நிலையத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறையும், அணு உலை வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறையும், சுற்றுப்புற கிராமங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூறினார்.பேட்டியின் போது அணுமின் திட்டங்கள் இயக்குனர் புரோகித், ரஷியாவைச் சேர்ந்த லிமரன்கோ வலேரி, அணுமின் நிலைய இயக்குனர்கள் ஆர்.எஸ்.சுந்தர், பானர்ஜி, நிதி இயக்குனர் பிரேமன் தினராஜ் மற்றும் ரஷிய விஞ்ஞானிகள், அணு மின்சார கழக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.