எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.26 - மதுரையில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது போலீசில் புகார் செய்யப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் ராஜன்செல்லப்பா அறிவித்தார். மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், ஆணையாளர் (பொறுப்பு) ஆறுமுகநயினார் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசும்படி மேற்கு மண்டல தலைவர் கே.ராஜபாண்டியனை மேயர் அழைத்தார். அப்போது திமுக கவுன்சிலர் எம்.எல்.ராஜ் எழுந்து எங்களைதான் முதலில் பேச அழைக்க வேண்டும் என்றார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ராஜன்செல்லப்பா கூறும் திமுகவினருக்கு வரிசைஅடிப்படையில் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொள்ளாத திமுக கவன்சிலர்கள் வாயில் கருப்புதுணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து மண்டல தலைவர் கே.ராஜபாண்டியன் பேசும்போது, மதுரையில் நல்ல மழை பெய்துள்ளது. சமீபகாலமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியும், குடிநீரில் சாக்கடை கலந்தும் வருகிறது. மழைநீர் தேங்குவதை மழை வடிகால்களை மராமத்து செய்ய வேண்டும்.
மேயர்- கடந்த திமுக நிர்வாகத்தில் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இதை போலவே மழைநீர் வடிகால்களும் சரிசெய்யப்படும்
தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து -வைகை அணையில் தற்போது 46 அடியும், பெரியாறு அணையில் 119 அடியும் தண்ணீர் உள்ளது.கோடைகாலமாக இருப்பதால் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். மேலும் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி பகுதிகளுக்கும் லாரி மூலம் அதிக அளவில் தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டல பகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் மேயர் திட்டங்களை பார்வையிட வந்தாலோ அல்லது மாநகராட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ மண்டல தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேயர் - நான் மண்டல தலைவர்களின் அதிகாரங்களில் தலையிடுவது இல்லை. மற்ற மண்டல தலைவர்கள் இது போன்று குறை கூறியதும் இல்லை. நீங்கள்(சாலைமுத்து) மட்டும்தான் கூறுகிறீர்கள். மாநகராட்சி திட்டம் மற்றும் பணிகளை பார்வையிட வந்திருப்போம். அதற்காக உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வந்ததாக கூறுவது தவறு.
பெ.சாலைமுத்து - மதுரை மாட்டுத்தாவணி சம்பக்குளத்தில் சுடுகாடு முதலில் வந்ததா? இல்லை தயா சைபர் பார்க் முதலில் வந்ததா?
நகரமைப்பு அதிகாரி- சுடுகாடுதான் முதலில் வந்தது.
சாலைமுத்து- அப்படியென்றால் தயா சைபர் பார்க் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான 8 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சியின் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. எந்த தனிநபரும் மாநகராட்சியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதை மாநகராட்சி இடித்து தள்ளி தன்வசம் ஆக்கி கொள்ளும். மு.க.அழகிரியின் சைபர் பார்க்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை இன்னும் இடிக்காதது ஏன்? மாநகராட்சி இடத்தை மு.க.அழகிரி திட்டம் போட்டு அபகரித்துள்ளார். இது நில அபகரிப்பா இல்லையா?
ஆணையாளர்- இது நில அபகரிப்பு தான்.
மேயர் -நில அபகரிப்பு என்றால் மாநகராட்சி மூலம் போலீசில் மத்திய மந்திரி அழகிரி மீது புகார் செய்யப்படும் என்றார். இதை கேட்டதும் அதிமுக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
வடக்கு மண்டல தலைவர் ஜெயவேல்- வடக்கு மண்டலத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கவுன்சிலர்கள் மக்ககளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள மாநகராட்சி சார்பில்செல்போன் தரவேண்டும்.
மேயர்- அனைத்து கவுன்சிலர்களுக்கும் செல்போன் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சிக்கு 250 கோடி நிதி முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
மதுரை மாநகராட்சி கூட்டம் நேற்று துவங்கியதும் மேயர் ராஜன்செல்லப்பா முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அதில் கூறியிருந்ததாவது, மதுரை மாநகராட்சி தோன்றிய காலம் தொட்டு மாநகராட்சி வரலாற்றிலேயே இது வரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக முதலமைச்சர் அம்மா மதுரை மாநகராட்சிக்கு ரூ.250 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது மக்களை குளிர வைத்துள்ளது. முதல்வர் அம்மாவிற்கு மாமன்றத்தின் சார்பிலும், மதுரை மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தொலைநோக்கு திட்டமான 2023ஐ கொண்டுவந்து தமிழக மக்கள் பல் வளமும் பெற்று பார் போற்றி வாழ்ந்திட வழி செய்துள்ளார். முதல்வர் அம்மாவிற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார