எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 29 - மைலாப்பூர் தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயந்தி தங்கபாலுவின் மனுவை ஆவணங்கள் சரி இல்லை என்று கூறி தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். ஆனால் நேற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த தங்கபாலு மனுவை ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விபரம் வருமாறு:-
வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலிக்கப்பட்டன. மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அத்தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. 26-ந் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் அனைத்து வேட்பு மனுக்களும் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில் மயிலாப்பூர் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை திருவல்லிக்கேணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மயிலாப்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கே.வி.தங்கபாலு மநு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த மயிலை சிவகாமி, தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:-
மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஜெயந்தி, தேர்தல் அதிகாரி முன் தாக்கல் செய்துள்ள வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் பல்வேறு உண்மைகளையும், தகவல்களையும் வேண்டுமென்றே மறைத்துள்ளார். சென்னையில் இருந்து வெளிபரப்பாகும் மெகா டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஜெயந்தி உள்ளார் என்று கே.வி.தங்கபாலுவே பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலை தனது பிரமாண பத்திரத்தில் ஜெயந்தி மறைத்து விட்டார்.
ஜெயந்தி நிர்வாக இயக்குநராக உள்ள மெகா டி.வி. நிறுவனத்தில் தங்கபாலு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பங்குகள் உள்ளன. இந்த தகவல்களும் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை. மெகா டி.வி. நிறுவனர், நிர்வாக இயக்குநர் ஜெயந்திக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னொரு டி.வி. நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல், எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முன் மெகா டி.வி.க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தங்கபாலுவுக்கு சொந்தமான தங்கவேல் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.600 கோடி ஆகும். அந்த கல்லூரியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திலேயே இது சம்பந்தப்பட்ட விவரங்கள் உள்ளன. இந்த விவரங்களையும் ஜெயந்தி தனது பிரமாண பத்திரத்தில் மறைத்து விட்டார். தவறான தகவல்களையும் கொடுத்து வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து ஜெயந்தி வேட்புமனு தாக்கல் செய்திருப்பது வாக்காளர்களை ஏமாற்றுவதாகும். ஆகவே, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் மயிலை சிவகாமி குறிப்பிட்டிருந்தார்.
மயிலாப்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தவர்களின் மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யா வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். இதையொட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, தி.மு.க. பகுதி செயலாளர் த.வேலு இருவரும் வந்தனர். வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரி இன்னொசென்ட் திவ்யா பரிசீலனை செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாற்று வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் கே.வி.தங்கபாலு வெளியில் வந்தார். அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தங்கபாலு பதில் அளிக்க மறுத்து விட்டார். இப்போது நான் எதுவும் சொல்ல மாட்டேன், மீண்டும் வருவேன், அப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன் என்றார். நிருபர்கள் விடவில்லை. தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். வேறு வழியில்லாமல் தங்கபாலு பதில் அளிக்க தொடங்கினார்.
அவர் கூறியதாவது:-
எனது மனைவி ஜெயந்தி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 4 ஆவணங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தி.மு.க. பகுதி செயலாளர் த.வேலு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மங்கள்ராஜ், தென்சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் செயலாளர் இளஞ்செழியன், பா.ம.க. கவுன்சிலர் ஜமுனா ஆகியோரது முன்னிலையில் 4 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 4 ஆவணங்களும் சரியாக இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்பட்ட 4 ஆவணங்களில் 2 ஆவணங்களை காணவில்லை என்று கூறுகிறார்கள். 2 ஆவணங்களில் கையெழுத்து போடவில்லை என்று கூறுகிறார்கள். மாற்று வேட்பாளராக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை ஏற்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆகவே, மயிலாப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுவது உறுதி. தேர்தல் கமிஷனின் குறைபாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் எனது மனைவி ஜெயந்தி புகார் கொடுக்க இருக்கிறார். எனது மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய். அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை, எந்த வழக்கும் தொடரப்படவில்லை, எந்த வழக்கும் நிலுவையிலும் இல்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.
தங்கபாலு காரில் ஏறி புறப்பட்டபோது, சுயேட்சை வேட்பாளர் மயிலை சிவகாமி தங்கபாலுவை எதிர்த்தும், அவரது மனைவி ஜெயந்தியை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பினார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு பதில் மாற்று வேட்பாளராக அந்த தொகுதியை சேர்ந்தவர்தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தங்கபாலு மாற்று வேட்பாளராக தனது பெயரை அறிவித்துக் கொண்டதும், வேட்புமனு செய்ததும் கண்டிக்கத்தக்கது. கட்சி மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக அவர் செயல்படுவதை ஏற்க முடியாது என்று மயிலை சிவகாசி கூறினார்.
தொடர்ந்து அவரும், அவரது ஆதரவாளர்களும் தங்கபாலுவுக்கு எதிராக கோஷம் எழுப்பியது அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவேசம் அடைந்த தங்கபாலுவை சமாதானப்படுத்தி அவரது ஆதரவாளர்கள் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு அடங்கியது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் அமைதியுடன் அங்கு நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.