எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜுன் - 11 - பிரதமர் மீது அன்னா ஹசாரே குழு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து பிரதமர் மீது சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு தேவையில்லை என்று பிரதமர் அலுவலகம் அன்னா ஹசாரே குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் 14 பேர் மீது சமீபத்தில் அன்னா ஹசாரே குழு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தனர். பிரதமர் நிலக்கரி துறை அமைச்சராக இருந்தபோது நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் மீதான குற்றங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஜூன் 25 ம் தேதிக்குள் இந்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்றும் தவறினால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதமும் அனுப்பி இருந்தனர். இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை பிரதமர் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகம் ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி, அன்னாஹசாரே குழுவினருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் நலனை கருத்தில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படியும், ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் படியும்தான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பான அனைத்து விபரங்களும் நிலக்கரி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் இருந்து கசிந்த சில தகவல்களின் அடிப்படையிலும், பத்திரிகைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையிலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டி இருப்பது சரியானது அல்ல. ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் எதையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அதுபற்றிய தனது கருத்துக்களை மத்திய அரசு பொதுக்கணக்கு குழுவிடம் தெரிவிக்கும். மேலும் இதுகுறித்து சி.பி.ஐ. தானே விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும், மந்திரிகள் மீது நீங்கள் கூறும் புகார்களும் ஏற்கக்கூடியது அல்ல. நாட்டில் அரசாங்கம் உள்ளது. நீதித்துறை உள்ளது. சட்ட நடைமுறைகள் உள்ளன. புகார்கள் வரும்போது அதுபற்றி அரசாங்கத்தின் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்துகின்றன. எனவே பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்கள் பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. தனியாக ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்பது நம் விசாரணை அமைப்புகளை அவமதிப்பது போலாகும். அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக கூறுவது தவறானது ஆகும். இதேபோல் சி.பி.ஐ. மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய உங்களுடைய அபிப்பிராயமும் தவறானது. அரசு பணிகளில் ஒளிவுமறைவற்ற தன்மை வேண்டும் என்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. வலிமையான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.