எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 19 - சென்னையில் நேற்று நடந்த 1006 திருமணங்களை முன்னின்று நடத்திவைத்த முதல்வர் ஜெயலலிதா அரசு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து பட்டியலிட்டு பெருமிதமாகக் கூறினார். கல்யாணம் பண்ணுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தவே கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார் என்ற பழமொழியை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதனை உணர்ந்த நமது இதயதெய்வம் எம்.ஜி.ஆர். 1982 ஆம் ஆண்டு இலவசத் திருமணத் திட்டத்தை கொண்டு வந்தார். 1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்தில் 2,500 திருமணங்களையும், திருச்சியில் 5,004 திருமணங்களையும் நடத்திக் காட்டினோம். இரண்டாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு 1,008 திருமணங்களையும்; 2003ஆம் ஆண்டு 1,053 திருமணங்களையும் இதே திருவேற்காட்டில் நான் நடத்தி வைத்தேன். மூன்றாவது முறையாக முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்ய முடியாமல் ஏழை, எளிய பெண்கள் வாடிக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண நிதி உதவித் தொகையான 25,000 ரூபாயுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்க உத்தரவிட்டேன். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கியதோடு, 4 கிராம் தங்கம் வழங்கவும், ஆணையிட்டேன். இது மட்டுமல்லாமல், மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் நிதி உதவியை 12,000 ரூபாய் என இரட்டிப்பாக்கி வழங்கியுள்ளேன். இன்று நடைபெற்ற திருமணங்கள் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் நடைபெற்ற சமத்துவ திருமணங்கள். இன்று, 11 மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 611 ஜோடிகளுக்கும்; பழங்குடியினத்தைச் சார்ந்த 34 ஜோடிகளுக்கும்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 183 ஜோடிகளுக்கும்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 132 ஜோடிகளுக்கும்; இதர வகுப்பைச் சேர்ந்த 46 ஜோடிகளுக்கும் திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது. இன்று திருமணம் நடந்தேறியுள்ள புதுமணத் தம்பதிகளுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம்; 6 கிராம் எடையுள்ள 4 வெள்ளி மெட்டிகள்; முகூர்த்தப் புடவை; ரவிக்கை; ஜரிகை வேட்டி; ஜரிகை துண்டு; சட்டை; உள்ளிட்ட 28 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த அரசு செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சார்ந்த மணமக்கள் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கான போக்குவரத்து வசதி, மணமக்கள் மற்றும் உறவினர்களுக்கான தங்கும் வசதி; அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீnullர் மற்றும் கழிவறை வசதிகள் ஆகியவையும் செய்து தரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த மணமக்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் இரவு பயணத்தை தவிர்த்திடும் வகையில் திருச்சியில் 16ஆம் தேதி இரவு தங்க வைக்கப்பட்டு, பின்னர் இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 19 திருமண மண்டபங்களில் மணமக்கள் மற்றும் அவர்தம் உறவினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், மணப்பந்தலில் அமர்ந்திருப்பவர்களும், பந்தலுக்கு வெளியே இருப்பவர்களும் நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் வகையில் தொலைக்காட்சி பெட்டிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தத் திருமண விழா முடிந்தவுடன், அவர்களுக்கு சிறப்பான திருமண விருந்து வழங்கிடவும், மணமக்கள் சீர்வரிசை பொருட்களுடன் அவர்கள் பயணித்து வந்த பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில், உங்கள் வீட்டு திருமணம் போல் அனைத்து வசதிகளையும் எனது தலைமையிலான அரசு செய்துள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.