எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.3 - சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தகராறுகள் ஆரம்பித்து தொகுதி தகராறுகள் வரை தி.மு.க. கூட்டணியினரின் குதிரைகள் நொண்டிக்கொண்டே ஓடுகிறது. காங்கிரஸ் குதிரை கோஷ்டி சண்டை என்னும் இரும்பு குண்டை கட்டிக்கொண்டு ஓடுகிறது.
எந்த தொகுதியிலும் தி.மு.க.வினர் காங்கிரசார் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வதில்லை தி.மு.க.விலும் காங்கிரசிலும் மக்களை சந்திக்கும் கவர்ச்சிகர தலைவர்கள் இல்லை. கருணாநிதிக்கு கூட்டம் குறைவாக கூடுகிறது. வி.ஐ.பி. விஜயகாந்தின் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தாங்க முடியாதவர்கள் காமெடி நடிகர் வடிவேலுவை அழைத்து வந்து காமெடி பண்ணுகிற நிலையை காணமுடிகிறது.
இந்நிலையில் கருத்துக்கணிப்புகள் மக்கள் எண்ணங்கள் தமது கூட்டணிக்கு எதிராக இருப்பதால் மிரண்டுபோன தி.மு.க.வினர் தனது குடும்ப தொலைக்காட்சியிலும், தாத்தா தொலைக்காட்சியிலும் சித்து வேல செய்து மக்களை குழப்பும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.
கொல்றாங்களே, கொல்றாங்களே என்று டப்பிங் வாய்ஸ் கொடுத்த குடும்ப தொலைக்காட்சியின் வியாதி தாத்தா தொலைக்காட்சிக்கும் வந்து விட்டது. விஜயகாந்தின் பிரச்சார தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் மைக் கீழே விழுந்தமைக்காக தோளில் தட்டி தனது உதவியாளரை எடுக்கச் சொன்ன விஜயகாந்தின் அத்தகைய காட்சியை அருகருகே ஒட்டவைத்து திரும்ப அந்த நபரை விஜயகாந்த் அடிப்பதுபோல் காண்பித்து அதற்கு டப்பிங் சவுண்டும் கொடுத்து ஒளிபரப்பினர் அடிப்பட்டவரை வேட்பாளர் என்றனர். ஆனால் அந்த காட்சியில் வருபவருக்கு தலையில் முடி கிடையாது. தர்மபுரி வேட்பாளர் தலையெல்லாம் முடி உள்ளவர்.
இதேபோல் தான் பேசும்போது முகத்தை மறைக்கும் கொடியை விஜயகாந்த் இறக்க சொல்லும் காட்சியை காட்டி அ.தி.மு.க. கொடியையும் காட்டி சிண்டு முடியும் வேலையில் இரண்டு தொலைக்காட்சிகளும் இறங்கி உள்ளன.
இதன் உச்சகட்டமாக ஜெயலலிதா கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்கள் கண்டு கொல்ளாத ஜெயலலிதா என்று தாத்தா தொலைக்காட்சி திரும்ப திரும்ப நேற்று ஒளிபரப்பியது.
அதில் ஜெயலலிதா பேசும் கூட்டத்தில் பெண்கள் அதிகம் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சரிந்து விழுகின்றனர் போலீசார் அவர்களை தூக்கி விடுகின்றனர். இதை வைத்து பெண்கள் மயங்கினர். ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை என்றும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் ஒளிபரப்புகின்றனர்.
இந்த பொய் செய்தி ஒளிபரப்பான போது பழைய ஞாபகங்கள் வந்தது. தி.மு.க.வினர் ஏதோ மனசாட்சி உள்ளவர்கள் போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அவர்களுடைய மனசாட்சி சாம்பிளுக்கு சில விஷயங்கள் கடந்த ஆண்டு சுகாதார துறை மந்திரி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் ஐ.ஏ.எஸ். மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புகின்றனர். வழியில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடக்கிறார். அவரை பார்த்து வண்டியை நிறுத்திய அமைச்சர் மற்றும் உடன் சென்ற அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர். உயிருக்கு போராடிய எஸ்.ஐ. தண்ணீர் கேட்டபோது தண்ணீர்கூட கொடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி அமைச்சர் நின்றார். வெட்டுபட்டவரை உடனடியாக தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றி உடனே சிகிச்சை அளித்திருந்தால் ஒரு காவல் அதிகாரியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம், ஆனால் மனசாட்சி உள்ள தி.மு.க. அமைச்சர் அல்லவா? அதனால் அதிகாரி சாவதை வேடிக்கை பார்த்தபடி நின்றார். இந்த காட்சியை பார்த்து உலகமே வேதனைபட்டது.
இதேபோல் அமைச்சர் மைதீன் கான் கார் ஒரு பாதசாரி மீது மோதிவிட்டு விபத்தில் சிக்கியவவை காப்பாற்ற கூட முயற்சிக்காமல் தப்பி ஓடிவிட்டது. இதெல்லாம் தி.மு.க.வினரின் மனசாட்சிக்கு சில சான்றுகள் சொந்த காட்சியின் அமைச்சரையே கொன்றதாக அழகிரி மேல் குற்றசாட்டு கூறப்பட்டது.
சில பெண்கள் மயங்கி விழுந்ததை ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லையாம் அவருக்கு மனசாட்சி இல்லையாம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி வள்ளலார் போல் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவர். 539 தமிழக மீனவர்களை துள்ள துடிக்க சண்டைக்காய் நாடு இலங்கை ராணுவத்தினர் கொன்றபோது கடிதம் எழுதுகிறேன் என்று பாவ்லா காட்டியவர். அப்பொழுது கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா? 539 தமிழக மீனவ பெண்கள் விதவை ஆனதை வேடிக்கை பார்த்தது மனசாட்சி உள்ள செயலா?
ஜெயலலிதா தி.மு.க. கட்சியினரையும், அரவணைத்து உதவியவர் கருணாநிதி சொந்த கட்சிக்காரனுக்கு கூட உதவாதவர். தி.முக.. விசுவாசியாக இருந்த எஸ்.எஸ்.சந்திரன் தனது சிகிச்சைக்கு பணமின்றி தவித்தபோது கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தபோது உரிய சிகிச்சை அளித்து உதவியதால் அ.தி.மு.க.வில் இணைந்த எஸ்.எஸ்.சந்திரன் கடைசிவரை அந்த நன்றியை மறக்காமல் இருந்தார். இதேபோல் தி.மு.க. மேடை பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இக்கட்டான குடும்ப பிரச்சனை கராணமாக கருணாநிதியிடம் உதவி கேட்க நானே கஷ்டப்படுகிறேன். இதில் உனக்கு எங்கு நான் பணம் தர என்று கூறியதாக கூறப்பட்டது. பின்பு ஜெயலலிதாவிடம் தீப்பொறி ஆறுமுகம் உதவி கேட்டபோது வேண்டிய பணத்தை கொடுத்து புது கார் ஒன்றையும் ஜெயலலிதா தீப்பொறி ஆறுமுகத்திற்கு கொடுத்தார். இதுபோல் பல விஷயங்கள் சொல்லலாம். பண வசதி இல்லாமல் கருணாநிதியால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த அவரது மகன் மு.க.முத்து உதவி கேட்டுபோனபோது அவருக்கு ரூ.5 லட்சம் உதவி செய்தவர் ஜெயலலிதா.
குடும்ப தொலைக்காட்சிக்கும், தாத்தா தொலைக்காட்சிக்கும் தோல்வி பயம் வந்துவிட்டதால் பொய்யான விஷயங்களை உண்மையாக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள். என்ன ஜகஜ்ஜால வேலை செய்தாலும் பிரச்சினைகள் தான் மக்களை சிந்திக்க வைக்கும். அதுதான் இந்த ஆட்சிக்கு முடிவுரையும் எழுதும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராகுல் காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் விரும்புகிறது : குஜராத் பிரசாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்
02 May 2024அகமதாபாத் : பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது, அங்கே பாகிஸ்தான் அழுகிறது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.