எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.7 - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஜஸ்வந்த் சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் முதலமைச்சர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து ஆதரவு கோர நேற்று சென்னை வந்தார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவதால் நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மீண்டும் போட்டியிடுகிறார். பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங், அன்சாரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவை பெறுவதற்காக ஜஸ்வந்த் சிங் நேற்று சென்னை வந்தார். முன்னதாக கோடநாட்டிலிருந்து,விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா சென்னை வந்தார். அவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். சென்னை வந்த ஜஸ்வந்த் சிங், பிற்பகலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவைக் கோரினார். இந்த சந்திப்பு பிற்பகல் 3.30 முதல் 3.45 வரை சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு, நேரில் சந்திப்பதற்கும் கேட்டுக் கொண்டார். ஜஸ்வந்த் சிங்கை 1984 ஆம் ஆண்டு முதலே, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தெரியும். இருவரும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றியுள்ளனர். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஜஸ்வந்த் சிங், நேற்று (6.8.2012) அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ஜஸ்வந்த் சிங்குக்கு, அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொண்டார். இதற்கு ஜஸ்வந்த் சிங் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது அ.தி.மு.க. பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளரும், அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டாக்டர் மு. தம்பிதுரை, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசிய பின்னர் முதல்வரின் இல்லத்திலிருந்து வெளியே வந்த ஜஸ்வந்த்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நிர்வாகத் திறமையற்றது என்பது நிரூபணமாகிவிட்டது. இதனால் இந்தியா கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியவில்லை. ஆகையால் அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒன்று திரள வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் என்னை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனை வரவேற்கும் விதமாக ஜஸ்வந்த் சிங்குக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜஸ்வந்த்சிங்குடனான சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:-
நண்பர் ஜஸ்வந்த்சிங் 28 ஆண்டு கால நண்பர். தனிப்பட்ட முறையில் அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் அதனை வரவேற்கும் விதமாக துணை ஜனாதிபதி தேர்தலில் ஜஸ்வந்த்சிங்கை அ.தி.மு.க. ஆதரிக்கும். ஜஸ்வந்த் சிங் மக்களவையில் சிறப்பாக பணியாற்றினார். அதனால் அவரை ஆதரிக்க அ.தி.மு.க. முன்வந்தது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
(ஆச்ஞ் சடீசூஙூ)
அ.தி.மு.க. தலைமை நிலையயம் அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவின், முக்கிய அறிவிப்பு:-
இன்று (7.8.2012) நடைபெற உள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங்-க்கு, அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024