முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்மழை அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

தென்காசி.ஆக. - 18 - குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, தேனருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் நேற்று காலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவியில் உல்லாச பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். குற்றாலத்தில் சீசனை முன்னிட்டு நாள் தோறும் உல்லாசப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வந்த நிலையிலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதனால் உல்லாசப் பயணிகள் வரிசையில் நின்று குளித்து வந்தனர். இதனால் உல்லாசப் பயணிகளும், சற்று வருத்தம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் நேற்று காலையில் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஐந்தருவியில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் உடனடியாக ஐந்தருவியில் குளித்து கொண்டிருந்த உல்லாசப் பயணிகளை அப்புறப்படுத்தினார்கள். மேலும் ஐந்தருவியில் குளிக்கவும் தடை விதித்தனர். காலை முதல் பிற்பகல் வரையிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் உல்லாசப் பயணிகளை குளிக்க போலீஸார் அனுமதிக்க வில்லை. அதன்பின் மாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்த நிலையில் உல்லாசப் பயணிகளை போலீஸார் குளிக்க அனுமதித்தனர். இதனால் உல்லாசப் பயணிகள் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்