எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஆக.- 19 - கிர”னைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று போலீசில் சரண் அடைந்தார். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின் போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை மாவட்டத்தில் உள்ள கிர”னைட் குவாரிகளை 18 குழுக்கள் அமைத்து ஆய்வு செய்தார். அவரும் கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால் புறம்போக்குகள் உள்ளிட்ட பல்வேறு அரசுக்கு சொந்தமான இடங்களை தனியார் கிரானைட் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இந்த குழுவினர் கடந்த 2ம் தேதி முதல் கிரானைட் குவாரிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு விதி மீறல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் நிறுவனங்கள் மற்றும் கிரானைட் அதிபர்கள் மீது 13 வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் மாவட்ட குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர கிரானைட் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக கிரானைட் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிக அளவில் ஈடுபட்டிருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேலூர் தெற்கு தெருவில் உள்ள பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக சோதனை நடத்தி அலுவலகம், தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பிஆர்பி நிறுவனத்தின் மூலம் இயங்கி வந்த 2 பஸ்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அந்த 2 பஸ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு சொந்தமான லாரிகள் மற்றும் பல வாகனங்களின் உரிமங்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையில் முறைகேடுகளில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகளில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த பிஆர்பி நிறுவன அதிபர் பி.பழனிச்சாமி, அவரது மகன்கள் மற்றும் சிந்து கிரானைட் அதிபர் பி.கே.செல்வராஜ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் நாகராஜ், மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 13 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு, வருகிற 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் பிஆர்பி கிர”னைட் நிறுவனத்தின் அதிபர் பி.பழனிச்சாமி நேற்று மதியம் 12.50 மணியளவில் வழக்கறிஞர்கள் பால்கனகராஜ், பீட்டர் ரமேஷ், சங்கரநாராயணன் ஆகியோருடன் ஒரு காரில் மதுரை சர்வேயர் காலனியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு மனுவுடன் வந்தார். பின்னர் காரைவிட்டு இறங்கி தனது வழக்கறிஞர்கள் புடை சூழ சூப்பிரெண்டு அலுவலகத்திற்குள பி.பழனிச்சாமி சென்றார். அப்போது அங்கிருந்த ஏடிஎஸ்பி மயில்வாகனனிடம் மனுவை கொடுத்து போலீசில் சரண் அடைந்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பாலகிருஷ்ணன் வெளியே சென்றிருந்ததால் அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பி.பழனிச்சாமி போலீஸ் எஸ்பியிடம் மனு ஒன்று கொடுத்தார். தான் போலீசில் சரண் அடைவதாக தெரிவித்தார். பின்னர் போலீசில் சரண் அடைந்த கிரானைட் அதிபர் பி.பழனிச்சாமியிடம் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பகல் 1.30 மணியளவில் பி.பழனிச்சாமியை போலீசார் வேனில் ஏற்றி சென்று வேறு ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி போலீஸ் எஸ்பி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது, கிரானைட் முறைகேடுகள் சம்பந்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டுவந்த பி.பழனிச்சாமி இன்று (நேற்று) சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சரண் அடைந்தவரிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்த போலீசாருக்கு உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடங்கிய ஒரு குழுவை அமைத்து இந்த விசாரணை நடத்தப்படும். சுப்ரீம் கோர்ட் வழங்கிய விதிமுறையின் படி வழக்கறிஞர்கள் பி.பழனிச்சாமியை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். பி.பழனிச்சாமியை எங்கே வைத்து விச”ரணை நடத்த உள்ளோம் என்பது பற்றி தெரிவிக்க இயலாது என்றார்.
ா
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல