எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.- 5 - தேர்தல் அதிகாரியையும், வீடியோ கிராபரையும் தாக்கியதாக அழகிரி மீதும், தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குகளை பதிவு செய்திருப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து ரசாயன உரத்துறை அமைச்சர் அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர் ராவ், பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 1 ம் தேதியன்று மத்திய அமைச்சர் அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற கிராமத்திற்கு அருகே இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கு நடந்த சம்பவத்தை தேர்தலை கண்காணிக்கும் பறக்கும் படையினர் வீடியோ படம் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அழகிரியின் ஆதரவாளர்கள் அந்த வீடியோ கிராபருடன் வாக்குவாதம் செய்தனர். உடனே அந்த வீடியோ கிராபர் தான் எடுத்த படத்தை மேலூர் தாசில்தாரும், உதவி தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவிடம் ஒப்படைத்தார்.
அவரிடம் இருந்தும் கேமிராவை பறிக்க தி.மு.க.வினர் முயன்றனர். ஒரு கட்டத்தில் தாசில்தாரை அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவவே தமிழ்நாடு வருவாய்த் துறை அதிகாரிகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு அழகிரியை கைது செய்யக் கோரி பல இடங்களில் போராட்டமும் நடத்தினார்கள். தேர்தல் பணியை புறக்கணிக்கப் போவதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் எச்சரித்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான தாசில்தார் காளிமுத்து புகார் செய்ததையடுத்து கீழவளவு போலீசார் கடந்த வெள்ளியன்று இரவே வழக்குப் பதிவு செய்தனர்.
தென் மண்டல தி.மு.க. அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம். மன்னன், மேலூர் தி.மு.க. யூனியன் செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் உட்பட 50 பேர் மீது தாசில்தாரும், தேர்தல் அதிகாரியுமான காளிமுத்துவை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்தனர். இ.பி.கோ. 143( 5 நபருக்கு மேலாக கூடுதல்), இ.பி.கோ. 341(வழிமறித்தல்), இ.பி.கோ. 332(அரசு ஊழியரை அடித்தல் அல்லது தாக்குதல்), இ.பி.கோ. 150(தடையை மீறி அரசு பணியை தடுத்தல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் மீது மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அழகிரி உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து மு.க. அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர்ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கூட தங்கள் கடமையை ஆற்ற முடியவில்லை. எனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அழகிரியை மத்திய மந்திரி சபையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலின் போது மக்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் தங்களால் வெற்றி பெற முடியாது என்று காங்கிரசும், தி.மு.க.வினரும் நினைக்கிறார்கள். அதாவது மக்களை விட இவர்கள் பணத்தைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
இதுவே தமக்கு கடைசி வாய்ப்பு என்று கருதும் இவர்கள் ஜனநாயகத்தின் மீது போர் தொடுத்திருப்பதாகவே மேலூர் சம்பவத்தை கருத வேண்டியதிருக்கிறது. அதனால்தான் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை கூட அச்சுறுத்தி வருகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சிறப்பான நடவடிக்கையை திசை திருப்பி அவர்களை அச்சுறுத்தும் வகையில் தி.மு.க. தலைவர்கள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் அலுவலர் தாக்கப்பட்ட சம்பவத்தை ஊடகங்கள் மூலம் உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் பணியாற்றிய தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. எனவே இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு மத்திய மந்திரி பதவியில் இருந்து அழகிரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளீதர்ராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல