எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர், அக்.25 - குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. வேடம் அணிந்து ஆடிப்பாடி வந்த பக்தர்களால் கோலாகலமாக இருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா சிறப்பாக நடக்கிறது. ஞானமூர்த்தீசுவரர் சமேதராக அன்னை முத்தராம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில் நடைபெறும் விழாக்களில் தசரா விழாவே முதன்மை வகிக்கிறது. இந்த தசரா விழா லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் விழாவாகும்.
இந்த ஆண்டு தசராவிழா கடந்த 15ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் அன்னை முத்தாரம்மன் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து விசுவகர்மேசுவரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிசாசூரமர்த்தினி, ஆனந்த நடராஜர், கஜலட்சுமி, கலைமகள் திருக்கோலங்களில் பவனி வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹரம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், மகா அபிஷே-கம் நடத்தப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு சூலாயுதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீயசக்திகளை அழிப்பதற்காக அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளினார்.
கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் வீற்றிருக்க மகிஷாசுர சூரன் சற்று நேரத்தில், சம்ஹாரம் செய்யப்பட்டான். அங்கு கூடி இருந்த பக்தர்கள் ஓம் காளி ஜெய் காளி என்று பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். பக்தர்கள் கோஷம் விண்ணை பிளந்தது.
வேடம் அணிந்த பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் நீராடி வேடத்தை கலைத்தனர். காணிக்கையாக வசூலித்த பணத்தை கோவிலில் செலுத்துகிறார்கள். தசரா குழுவினர் சார்பில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விடிய, விடிய பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
தொடர்ந்து அம்மன் கடற்கரை மேடைக்கு வந்து சேர்ந்தார். அங்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. சிதம்பரேசுவரர் கோவில் எழுந்தருளிய அம்மனுக்கு, அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. இன்று (வியாழன்) பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. பகலில் அன்னதானம் நடைபெறும். மாலையில் அம்மன் கோவிலை வந்தடைந்ததும் கொடி இறக்கம் நடைபெறும். தொடர்ந்து காளி வேடம் அணிந்து இருக்கும் பக்தர்களுக்கு கோவில் அர்ச்சகர் காப்பு களைகிறார். நாளை (வெள்ளி) பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர். இன்று மாலை காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து உணவை சமைத்து சாப்பிட்டு தங்கி இருந்து காப்பு களைந்ததும் ஊர் திரும்புவார்கள்.
தசரா விழாவில் சிவன், விஷ்ணு, காளி, கருங்காளி, முத்தாரம்மன், முருகன், விநாயகர், ராமர், லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், கரடி, முனிவர், முனிவர், போலீஸ்காரர், பிச்சைக்காரன், குறவன்குறத்தி, மணப்பெண், மாப்பிள்ளை என பல்வேறு வேடம் அணிந்து வந்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. பஸ்களில் கூட்டம் அலை மோதியது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி (பொறுப்பு) தலைமையில், 8 துணை சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் ஆயுதப் படை போலீசார், சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி உதவி ஆணையர் மற்றும் தக்கார் க.செல்லத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி தி.சங்கர் ஆகியோர் செய்து உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.