எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 7 - விவசாயிகளின் விளைபொருளை பாதுகாக்கவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கவும் ஏதுவாக 30.36 கோடி ரூபாய் செலவில் 20 கிடங்களில் ஊரக சேமிப்பு இடங்குகளைக் கட்டவும், 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் 20 குளிர்பதன கிடங்குகளை அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழவுத்தொழிலை மேற்கொண்டுள்ளவர்கள் உலகத்தில் வாழும் அனைவருக்கும் உணவு அளித்து காப் பதால், உழுபவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் வள்ளுவர் பெருந்தகை. அத்தகைய உழவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வழி செய்யும் வகையிலும், பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. வேளாண் துறையில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் இயந்திரங்கள் வழங்குதல், நுண்ணீர் பாசனத்திற்காக விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாய விளை பொருட்களை சேமிக்க, கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைத்தல், அதிக அளவு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்குதல், உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளின் நலனுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும், பயிர்களை நீnullண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதாலும், அறுவடை முடிந்தவுடன் கிடைத்த விலைக்கு தங்கள் விளை பொருட்களை விற்று விடுகின்றனர். இதன் காரணமாக, தாங்கள் விளைவித்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். விலை வீழ்ச்சியின் போது பொருட்களை பாதுகாத்து, பின்னர் விலை ஏற்றத்தின் போது விற்பனை செய்வது விவசாயிகளின் வருவாயை பெருக்க உதவும் என்பதையும், அறுவடைக் காலங்களில் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சியும், தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தி இல்லாததால் விலை ஏற்றமும் ஏற்படுவது தடுக்கப்படும் என்பதையும், கருத்தில் கொண்டு, எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய நவீன முறையிலான சேமிப்புக் கிடங்குகளை கூடுதலாக உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில், விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை பாதுகாப்பாக இருப்பில் வைத்து, அவற்றிற்கு நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வகையிலும், உழைப்பின் பலன் உழவர்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், எடைபோடும் இயந்திரங்கள், எடைமேடைகள், ஈரப்பதமானி போன்ற வசதிகளுடன் கூடிய 50 கிடங்குகளை 82 கோடி ரூபாய் செலவில் அமைக்க சென்ற ஆண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதே போன்று, இந்த ஆண்டு 18 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 50 குளிர்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை 37 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு மேலும், 20 நவீன சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 20 குளிர்ப்பதனக் கிடங்குகள் ஆகியவற்றை 30 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 நவீன சேமிப்புக் கிடங்குகள், ஒவ்வொன்றும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை விற்பனைக் குழுவின் செங்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கடலூர் விற்பனைக் குழுவின் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு விற்பனைக் குழுவின் கருமாண்டி செல்லிப்பாளையம் மற்றும் வேப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேலூர் விற்பனைக் குழுவின் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருச்சி விற்பனைக் குழுவின் துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் பொங்கலூர், பல்லடம் மற்றும் தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விழுப்புரம் விற்பனைக் குழுவின் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நாகப்பட்டினம் விற்பனைக் குழுவின் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தர்மபுரி விற்பனைக் குழுவின் அரூர் மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ராமநாதபுரம் விற்பனைக் குழுவின் ஆர்.எஸ்.மங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருநெல்வேலி விற்பனைக் குழுவின் அம்பாசமுத்திரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தேனி விற்பனைக் குழுவின் போடிநாயக்கனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தர்மபுரி விற்பனைக் குழுவின் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சேலம் விற்பனைக் குழுவின் ஆத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய 20 இடங்களில் ஊரக சேமிப்புக் கிடங்குகள் கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, 25 மெட்ரிக் டன் கொள்ளளவில் 20 குளிர்ப்பதன கிடங்குகள், கிடங்கு ஒன்றிற்கு 31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதத்தில் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கோயம்புத்தூர் விற்பனைக் குழுவின் பல்லடம், பெள்ளாச்சி மற்றும் வடக்கிப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், சேலம் விற்பனைக் குழுவின் மேச்சேரி மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், தர்மபுரி விற்பனைக் குழுவின் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருவண்ணாமலை விற்பனைக் குழுவின் செய்யார், சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு விற்பனைக் குழுவின் வெள்ளக்கோயில் மற்றும் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருநெல்வேலி விற்பனைக் குழுவின் அம்பாசமுத்திரம், புத்தூர், சாத்தான்குளம் மற்றும் கழுகுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், விழுப்புரம் விற்பனைக் குழுவின் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருச்சி விற்பனைக் குழுவின் அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடலூர் விற்பனைக் குழுவின் விருதாச்சலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய 20 இடங்களில் குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவசாயத்தில் இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நவீன இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக அளவில் தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண்மை பயிற்சி நிலையத்தில் இரண்டாண்டு வேளாண்மை பட்டயப் படிப்பினை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் இந்த ஆண்டு முதல் தொடங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டிச் சுமை, அதிகரிக்கும் போக்குவரத்து செலவினங்கள் போன்றவற்றால் ஏற்படும் நிதிச் சுமையின் காரணமாக சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழிவகை முன்பணமாக என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலைக்கு 17 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும், திருத்தணி சர்க்கரை ஆலைக்கு 14 கோடியே 29 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 6 கோடியே 48 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 38 கோடியே 13 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.