எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புணே, டிச.22 - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 35 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் ரன் உயர்வுக்கு உதவினார். பின்னர் பேட் செய்த இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
பின்னர் பேட் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணியில், மைக்கேல் லம்ப் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ஆக உயர்ந்த போது 1 ரன்கள் எடுத்திருந்த லம்ப் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து லுக்ரைட்டுடன் ஜோடி சேர்ந்தார். ஹேல்ஸ். இந்த ஜோடியினர் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் அந்த அணி 5.5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. இவ்வாறு போகும் பட்சத்தில் அந்த அணி 180 ரன்களைக் கடந்து விடும் என்ற நிலை இருந்தது. ஹேல்ஸ் அதிரடி : அதிரடியாக விளையாடிய ஹேல்ஸ் 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். இவருடன் மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வந்த ரைட்டை யுவராஜ் சிங் வெளியேற்றினார். அவர் 21 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். அப்போது அணியின் ஸ்கோர் 10.1 ஓவர்களில் 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. யுவராஜ் சிங்கின் நேர்த்தியான சுழற்பந்து வீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்ததுடன் ரன் விகிதமும் குறைந்தது. ரைட்டைத் தொடர்ந்து ஹேல்ஸ் 56 ரன்களிலும் மோர்கன் 5 ரன்களிலும் யுவராஜ் பந்து வீச்சில் நடையைக் கட்ட அணியின் ரன் உயர்வு தடுக்கப்பட்டது. இவர்களில் ஹேல்ஸை போல்டாக்கினார் யுவராஜ். பின்னர் களமிறங்கிய வீரர்களில் பட்டேல் 24 ரன்களும், ஆட்டமிழக்காமல் பட்லர் 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் அசோக் திண்டா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். அதிரடி வெற்றி: 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் ரஹானேவும், கம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி ஓரளவு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அணியின் ஸ்கோர் 42 ஆக இருந்த போது 16 ரன்கள் எடுத்திருந்த கம்பீர் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து 19 ரன்கள் எடுத்திருந்த ரஹானேவும் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் அபாரம்: பின்னர் கோலியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். கோலி மெதுவாக
விளையாட, யுவராஜ் தனது வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டார். அவரது அதிரடியில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 93 ஆக உயர்ந்த போது யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் வெற்றி இலக்கை நோக்கி சீராக வெற்றி இலக்கை நோக்கி சீராக நகர்ந்தது. வெற்றிக்கு மேலும் 10 ரன்கள் என்றிருந்த போது 26 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா ரன் அவுட்டானார். பின்னர் அதே ஓவரில் தோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். 21 பந்துகளில் 24 ரன்களில் தோனியும், ரன் ஏதுமின்றி ஜடேஜாவும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னன் 2 விக்கெட்டுகளையும் மேக்கர், ரைட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் : 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், 21 பந்துகளில் 38 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்த யுவராஜ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில்
1-0 என்ற முன்னிலை பெற்றது இந்திய அணி. கடைசி டி20 போட்டி வரும் 22 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.