எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.17 - முறைகேடு மற்றும் எந்திர கோளாறு பற்றி எழுந்த புகாரை ஒட்டி 8 வாக்குசாவடிகளில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 8 வாக்கு சாவடிகளில் சராசரி 81.3 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ந்தேதி நடந்தது. சராசரியாக 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. தேர்தலின்போது நெய்வேலி, கிள்ளியூர், திருவிடைமருதூர், ஆரணி, போடிநாயக்கனூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் முறைகேடு மற்றும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ஆரணி தொகுதி புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் மின்னணு எந்திரம் கோளாறு ஆனது. மதியம் 1 மணிக்கு பிறகு பதிவான வாக்குகள் எந்திரத்தில் பதிவாகவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் மறுதேர்தல் நடத்த உத்தர விட்டது. நெய்வேலி தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 55, 56 எண்ணுடைய 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நாளில் மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கியது. கலவரம் நடந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி பருத்திக்குடி ஊராட்சியில் 3 வார்டுகள் உள்ளன. இதில் பருத்திக்குடி, படைத் தலைவன்குடி, கோவில் பத்து,வளையாவட்டம், திருக்கழிதட்டை ஆகிய பகுதிகள் உள்ளது. பருத்திக்குடி வாக்காளர்களுக்கு வளையாவட்டம் பள்ளியிலும், வளையா வட்டம், திருக்கழிதட்டை பகுதிகளுக்கு பருத்திக்குடி பள்ளியிலும் வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பருத்திக்குடிக்கும் வளையாவட்டத்துக்கும் இடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவ்வளவு தூரம் சென்று ஓட்டு போட முடியாது என்று பொது மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. போடி தொகுதி சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தேர்தல் அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட வித்தியாசம் காரணமாக இன்று காலை அங்கு மறுவாக்குப்பதிவு நடந்தது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் புளியம் பட்டி 2வது எண் வாக்குச் சாவடியில் 91 சதவீதம் வாக்குகள் பதிவானது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பார்வையாளர் தீரஜ்குமார் விசாரணை நடத்தினார். மேலும் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு கட்சி ஏஜெண்டு வாக்காளர்களை மின்னணு எந்திரம் அருகே அழைத்து சென்று ஓட்டு போட வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் புளியம்பட்டி கிராமத்தில் உள்ள 2வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என நேற்று மதியம் அறிவித்தார். குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் 121வது எண் கொண்ட வாக்குச்சாவடி அனந்தமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு சாவடியில் வாக்குபதிவு முடிந்து மொத்த வாக்குகளை கணக் கிடும் போது 36 வாக்குகள் மாயமானது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் மொத்தம் 1136 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் 737 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் கடைசியாக வாக்கு பதிவு எந்திரத்தில் 701 வாக்குகள் மட்டும் பதிவானதாக எந்திரம் காட்டியது. அதைத் தொடர்ந்து இந்த வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 13ந் தேதி தேர்தலின்போது வாக்காளர்கள் எந்த ஆவணத்தை காட்டி வாக்களித்தார்களோ, அந்த ஆவணங்களை காட்டி வாக்களித்தனர். அப்போது வாக்களர்களின் இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. 8 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மறு ஓட்டுப்பதிவை முன்னிட்டு 8 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்கு பதிவு விபரம் வருமாறு:-
திருவண்ணாமலை, ஆரணி 75 சதவிகிதம் கடலூர் நெய்வேலி 84.3 சதவிதம் தங்காவூர் திருவிடைமருதூர் 87.2 சதவிகிதம், தேனி-போடி நாயக்கனூர் 80.8 சதவிகிதம் நெல்லை சங்கரன்கோவில் 93.2 சதவிகிதம் கன்னியாகுமரி- கிள்ளியூர் 70.2 சதவிகிதம் மற்ற இரண்டு வாக்கு சாவடிகளில் முறையே 8.28 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த பதிவு 81.3 சதவிகிதம்.இவ்வாறு தலைமை தேர்தல் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.