எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.28 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கோபத்துடன் வெளிநடப்பு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தேசிய வளர்ச்சி குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். அப்போது, அனைத்து மாநில முதல்வர்களுக்கு பேச 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியது. இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். ஆனால் 10 நிமிடம் பேசுவதற்கு முன்பே மணி அடிக்கப்பட்டதால் கோபமடைந்த முதல்வர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தின் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் எனக்கு 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி தந்ததால் வெளிநடப்பு செய்தேன். தேசிய வளர்ச்சி குழுமக் கூட்டத்தில் முதலமைச்சர்கள் அதாவது மத்திய அரசை எதிர்க்கும் முதலமைச்சர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். எடுத்த எடுப்பிலேயே நான் பேசத் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு முதலமைச்சருக்கும் 10 நிமிடங்கள் தான் காலஅவகாசம் அளிக்கப்படும் என்றார்கள். அந்த 10 நிமிடங்கள் முடிந்துவிட்டால் ஒரு மணி அடிக்கப்படும் என்றார்கள். நான் பேச ஆரம்பித்தேன். நான் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேனோ அதில் மூன்றில் ஒரு பங்குகூட சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் மணியடித்துவிட்டு நிறுத்திக்கொள்ளுங்கள் என்றார்கள். இது மிகப் பெரிய அவமானம். இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அவமானம் அல்ல, தமிழ்நாடு மாநிலத்திற்கே, தமிழக மக்களுக்கே இழைக்கப்பட்ட அவமானமாகத்தான் கருதப்படவேண்டும். இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் இதுபோன்ற ஒரு பழக்கம் இருந்ததில்லை. ஏற்கனவே நான் பல கூட்டங்களில் பிரதமர் கூட்டிய பல முதலமைச்சர்கள் மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவரை இப்படிப்பட்ட ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படவில்லை, இப்படிப்பட்ட ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு முன்பு நான் கலந்து கொண்ட கூட்டங்களில் எத்தனையோ முதலமைச்சர்கள், மத்திய அரசை ஆதரிக்கும் முதலமைச்சர்கள் 30 நிமிடங்கள், 35 நிமிடங்கள் என்றெல்லாம் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக இதற்கு முன்பு நான் கலந்துகொண்ட முதலமைச்சர்கள் மாநாட்டில்கூட அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் 35 நிமிடங்களுக்குமேல் பேசினார். அப்போதெல்லாம் யாரும் அவரை நிறுத்திக்கொள்ளுமாறு சொல்லவில்லை, கட்டளையிடவில்லை, மணியடிக்கவில்லை. இன்று நான் பேசத் தொடங்கியதும் 10 நிமிடங்கள் ஆவதற்குள் மணியடித்து என்னை அவமானப்படுத்திவிட்டார்கள், கேவலப்படுத்திவிட்டார்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக அந்த மாநிலப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காக 10 நிமிடங்கள் எந்த மாநில முதல்வருக்கும் போதாது. 10 நிமிடங்களுக்குள் அந்த மாநிலம் சம்பந்தபட்ட அத்தனை பிரச்சினைகளையும் எடுத்துச் சொல்ல முடியாது. 12-வது ஐந்தாண்டு திட்டம் என்ற ஆவணம் மிக நீnullண்டதொரு ஆவணம். அதிலுள்ள பொருட்களைப்பற்றியெல்லாம் பேசவேண்டுமென்றால் நிச்சயமாக 10 நிமிடங்களுக்குள் யாரும் எதையும் சொல்லி முடிக்கமுடியாது. 10 நிமிடங்களுக்கு மேல் ஒதுக்குவதற்கு தயாராக இல்லையென்றால், மத்திய அரசு ஏன் எங்களை அழைக்கவேண்டும்? இவ்வளவு துரம் டில்லிக்கு வருமாறு முதலமைச்சர்களை ஏன் அழைக்கவேண்டும்? அழைத்துவிட்டு எங்களை பேச அனுமதிக்காமல் எங்கள் குரல்வளையை நெரித்துவிட்டு எங்களை ஏன் இப்படி கேவலப்படுத்த வேண்டும்? ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும்? என்பதுதான் என்னுடைய கேள்வி. இதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே மத்திய அரசு தனக்கு ஆதரவாக இல்லாத எதிர்ப்பு தெரிவிக்கும் முதலமைச்சர்களை பேச அனுமதிக்காமல் இப்படியொரு புதிய அடக்குமுறையை தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு மீண்டும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கோபத்துடன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.