எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச்.29 - டெல்லி தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவை பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து, பல்வேறு அரசு கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
டி.ராஜா எம்.பி:-
டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்திருப்பது, மத்திய அரசுக்குவிடப்பட்டுள்ள எச்சரிக்கை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். டெல்லியில் இது குறித்து பேட்டியளித்த அவர், தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டம் என்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றும், ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அதிக நேரம் பேச வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதற்கு மாறாக இடையிலேயே மணி அடித்து அவரது பேச்சை நிறுத்திய செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது முற்றிலும் நியாயமானது என்றும் இதன் மூலம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் டி.ராஜா தெரிவித்தார்.
தா.பாண்டியன்:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இதுகுறித்து வன்மையாக கண்டித்துள்ளார். ஒரு மாநிலத்தின் கருத்தை மத்திய அரசுக்கு எடுத்து கூறுவது, மாநில முதல்வரின் கடமையாகும். ஆனால் அந்த கடுமையை செய்ய விடாமல், மத்திய அரசு தடுத்து உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்தவுடன், பள்ளியில் பிள்ளைகள் பேசுகையில் மணி அடிப்பதுபோல், செய்வது அரசியல் அநாகரீகம் ஆகும். மத்திய அரசின் இந்த செயல், தமிழகத்தையே அவமதிப்பதாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
சரத்குமார் எம்.எல்.ஏ:-
மக்கள் சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களை மத்திய அரசு மிகவும் அவமதித்துவிட்டது என்று கூறியுள்ளார். தமிழக மக்களின் பிரதிநிதியாக முதல்வர் ஜெயலலிதாவை பேசவிடாமல் செய்திருப்பது, மத்திய அரசின் வஞ்சக போக்கை எடுத்துக் காட்டுகிறது. மாநிலங்களின் குரல் வளையை நெறிப்பதற்கு ஒப்பாகும் இது என்றார்.
ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்பிரமணியன் சுவாமி:-
தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்திருப்பது முற்றிலும் நியாயமான செயல் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாநிலத்தின் திட்டங்கள், தேவைகள் குறித்த விஷயங்களை ஒரு முதலமைச்சர் 10 நிமிடங்களில் எப்படி விளக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டத்தை நடத்த நேரம் போதவில்லை என்றால், அடுத்த நாளும், அக்கூட்டத்தை தொடர்ந்து நடத்தலாமே என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதைவிடுத்து, ஒரு பள்ளிக்கூட விவாதத்தை மணி அடித்து நிறுத்துவது போல், ஒரு முதலமைச்சரை அவமதித்திருப்பது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, வேகமாக மூழ்கிக் கொண்டிருக்கும் படகு என்பதையே காட்டுகிறது என்றும் டாக்டர். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன்:-
பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதும், தேவையான வளர்ச்சி திட்டங்களை போதுமான அளவு கொடுக்காமல் புறக்கணிப்பதும் வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது.
அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் தொடர்பான மசோதாவிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பதும், காவிரி பிரச்சினை, மின்சாரம், மண்எண்ணெய் வழங்குதல் போன்ற பல விஷயங்களில் தமிழகத்தின் நலனுக்கு புறம்பாக நடந்து கொள்வதும் மத்திய காங்கிரஸ் அரசின் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
இந்தநிலையில் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் கவலைகளை எடுத்துக் சொல்வதற்கு வாய்ப்பளிக்காமல், முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானமாகும். மத்திய அரசின் தவறான இந்த செயலை பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .