எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.30 - இந்தியாபாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இன்று நடக்கிறது.இதையொட்டி சென்னையில் கிரிக்கெட் கோலாகல விழா துவங்கிவிட்டது.ஆனால் அதை மழை அச்சுறுத்திக்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரு 20 ஓவர் போட்டிகளிலும், 3 ஒரு நாள் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டி தொடர் 11 என்ற கணக்கில் சம நிலையை அடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் நாளை சென்னையில் சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 13 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இதற்கு முன் கடைசியாக 1994ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டியில் மோதின. இதில் 12 ரன்னில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதற்கு இந்தியா நாளை சென்னையில் பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடைசியாக 2007ம் ஆண்டு இந்தியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 32 என்ற கணக்கில் வென்றது.
அதே போல் இந்த முறையும் தொடரை வெல்லும் ஆவலில் வீரர்கள் உள்ளனர். அதற்கு இன்று சென்னையில் தொடங்கும் முதலாவது போட்டி அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் யுவராஜ் சிங் புதிய அவதாரம் எடுத்தது போல் நேற்று முன்தினம் 20 ஓவர் போட்டியில் விளையாடினார். இன்றும் அவர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.
காம்பீர், சுரேஷ் ரெய்னா போன்றோரும் நல்ல நிலையில் உள்ளனர். 20 ஓவர் போட்டியில் விளையாடாத சேவாக் இன்று ஒரு நாள் போட்டியில் இடம் பெற்றுள்ளார். அவர் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார். இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மிகப்பெரிய ரன்னை குவிக்க முடியும்.
பாகிஸ்தான் அணியும் வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியில் தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் பலமாகவே உள்ளது. இதனால் அந்த அணியை வெல்வது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.
சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. இதில் 34 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை இந்தியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. நாளை உள்ளூர் மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு. ஒரு நாள் போட்டிக்கான அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜாகீர் கான் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இர்பான் பதான், உமேஷ் யாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. பந்து வீச்சாளர்கள் ராகுல் சர்மா, ஓஜா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் யுவராஜ்சிங், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா, ஷமி அகமது, அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளனர்.
15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வருமாறு:
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், வீராத் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, ரகானே, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா, ஷமி அகமது, அசோக் திண்டா.
இன்று காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பொறுப்பை 2 நாட்களுக்கு முன்பே சென்னை போலீஸ் ஏற்றுக்கொண்டது. போட்டியை காண வரும் ரசிகர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். வாகனங்கள் நிறுத்தும் இடம், முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தும் மழை:
சென்னையில் இன்று ஒரு நாள் போட்டி தொடங்க உள்ள நிலையில் மழை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது. மழை மேலும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய போட்டி நடக்குமா? வருண பகவான் கையில் தான் உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல