எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்ர், ஜன. 20 - சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை கைது செய்தனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை இவர்கள் நாடு முழுவதிலும் புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு அச்சடிக்கும் கள்ள நோட்டுக்களை இந்திய இளைஞர்கள் மூலமாகவே புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதன்பிறகு கள்ள நோட்டு வேட்டையை தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரப்படுத்தினர். கட்டிட தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போல ஊடுருவி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டனர். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கள்ள நோட்டுகளை மாற்றிய வெளிமாநில வாலிபர்களும் போலீசில் சிக்கினர்.
இதன்பிறகு ஓரளவுக்கு கள்ள நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டாலும், புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகள் ஆங்காங்கே பொதுமக்களிடம் சிக்கி குழப்பத்தை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் அலுவலக உணவகத்திலும் கள்ள நோட்டு சிக்கியது. 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு சில கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு கூட தயக்கம் காட்டினர். அந்த அளவுக்கு கள்ள நோட்டுகளின் ஆதிக்கம் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்எருக்கஞ்சேரி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார்.
பின்னர் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் குணவர்மன், சம்பத் ஆகியோருடன் அவர் மூலக்கடை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களில் 3 பேர் தப்பி விட்டனர். இஸ்மாயில் என்பவர் மட்டும் சிக்கினார். காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தினர். கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டுக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.
அங்கிருந்த ரபீக் என்பவர் கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டார். அந்த வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். அனைத்தும் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாகும். வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்னன.
இதைத் தொடர்ந்து மண்ணடியில் உள்ள ஒரு வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதில் மண்ணடி பகுதியைச் சேர்ந்த முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் லட்சக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இந்த கள்ள நோட்டுகள் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய ரபீக்கை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் ஏற்கனவே ஒருமுறை கள்ள நோட்டு வழக்கில் சிக்கியவர். கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் யாரேனும் செயல்பட்டுள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 16 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 12 hours ago |
ஆனியன்ப்ரை6 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.