எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.20 - காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் இன்னமும் வெளியிடாது காலம் தாழ்த்துவது; மின்சாரம் தர மறுப்பது; கூடுதல் நிதி தர மறுப்பது; மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைப்பது என தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதோடு மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும், ரயில்வே கட்டணத்தையும் உயர்த்தி, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 24.1.2013 அன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதையும், காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பதையும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதையும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத சூழ்நிலையில், அதனை தி.மு.க.வும் வேடிக்கை பார்த்து வந்த நிலையில், நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும் இதனை வலியுறுத்தினேன். இதனை மத்திய அரசு உதாசீனம் செய்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தொடுத்து, அதன் விளைவாக 31.1.2013-க்குள் மத்திய அரசு தனது முடிவினை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது. கருணாநிதியும் தன்னலத்தைக் கருத்தில் கொண்டு காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக் கூடாது என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்.
இது மட்டும் அல்லாமல், டெல்லி மாநில அரசால் தேவையில்லை என்று ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவதற்கும், கூடங்குளம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கும், தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெயினை அளிப்பதற்கும், கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கும், டிஜிட்டல் உரிமத்தை தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு தருவதற்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்து வருகிறது.
இன்னும் சொல்லப் போனால், தமிழக அரசின் தேவைகளைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு கூட போதிய கால அவகாசத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
இதே போன்று, விஷம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு என அனைத்தையும் உயர்த்தி விலைவாசி மேலும் உயர வழி வகுக்கும் நடவடிக்கைகளை, மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளை, மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கின்ற தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் தி.மு.க. தலைவர்
கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற; காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத; தமிழகத்திற்கு தேவையானவற்றை தர மறுக்கின்ற; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கின்ற; ரயில்வே கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், 24.1.2013 வியாழக் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அரசு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்ட அளவில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை ஏற்போர் மற்றும் முன்னிலை வகிப்போர்களது பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான சர்வாதிகார மத்திய கூட்டணி அரசுக்கு தங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.