எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.20 - சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீட்டின் மர்ம ஆசாமிகள் சிலர் கல்வீச்சு தாக்கினர். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவாக நிலை எடுத்ததற்காக விஜய் வீடு தாக்கிப்பட்டதாக தெரிகிறது. சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜய் வீட்டின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், வீட்டின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன.
இதுகுறித்து போலீசில் நடிகர் விஜய் புகார் செய்துள்ளார்.
பிரபல நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு சாலிகிராமம், ஸ்டேட் காலனி 3-வது தெருவிலுள்ளது. அரண்மனை போன்ற இந்த வீட்டின் முன்பு பெரிய தோட்டமும் உள்ளது. விஜய் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் முதலில் இங்குதான் வசித்தார்.
பின்னர், இரு ஆண்டுகளுக்கு முன்பு அடையாறில் புதிதாக வீடுகட்டி அங்கு குடியேறினார். இதனால், சாலிகிராமம் வீடு அவரது அலுவலமாக மாற்றப்பட்டது. சமீபத்தில் இந்த வீட்டின் அருகில் தனியாக அலுவலகம் திறக்கப்பட்டது.
இதனால், சாலிகிராமம் வீடு வாடகைக்கு விடப்பட்டது. இதில் கடந்த 5 மாதங்களாக பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடும்பத்துடன் வாடகைக்கு இருக்கிறார். அவரது இசை ஸ்டூடியோவும் வீட்டின் முன்பகுதியில் செயல்படுகிறது. ஆனால், இந்த தகவல் பரவலாக அனைவருக்கும் தெரியவில்லை.
இந்த சாலிகிராமம் வீட்டில் இன்னும் விஜய் குடும்பத்தினர் வசிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் தான், இந்த வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். 2 கார்களில் வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கற்களை வீசி வீட்டி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து விஜய் ஆன்டனி உடனடியாக நடிகர் விஜய்க்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு விஜய் அதிர்ச்சியடைந்தார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அவர் நேற்று காலை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் சமயத்தில், நடிகர் விஜய்யும் அரசியல் களத்தில் குதிப்பார் என்ற பரபரபரப்பான பேச்சு எழுந்தது. அவரது சமீபத்திய திரைப்படங்களுக்கு ஆளும்கட்சி தரப்பிலிருந்து கடுமையான நெருக்கடி தரப்பட்டதாக கூறப்பட்டது.
இதனால், விஜய் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. திரை உலகில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய் களமிறங்கினார். அவரது தந்தை இயக்குனர் எஸ்.சந்திரசேகரன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பலமுறை நேரில் சந்தித்து பேசினார்.
விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக களம் இறங்கியது.
அதே நேரத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதை கண்டித்து நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்ற அமைப்பான மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இதில், அவரது ரசிகர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், திருச்சி சுற்றுப்பயணத்தில் இருந்த ஜெயலலிதாவை மீண்டும் சந்தித்து பேசினார். அ.தி.மு.க. கூட்டணிக்கு வெளிப்படையான ஆதரவையும் தெரிவித்தார். பின்னர், பிரச்சாரத்தையும் தொடங்கினார். நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த அ.தி.மு.க. கூட்டணி பிரச்சார கூட்டங்களில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தனது மகன் விஜய் உத்தரவின் பேரிலேயே அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒவ்வொரு கூட்டத்திலும் மறக்காமல் கூறினார். விஜய் நற்பணி மன்றத்தினரும் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பாளர்கள் என்றும் கூறினார்.
இவ்வாறு தேர்தலில் நடிகர் விஜய் எடுத்த நிலைப்பாடு எதிரொலியாகவே இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து நடிகர் விஜய்யின் செய்தி தொடர்பாளர் செல்வக்குமார் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது தாக்கப்பட்டுள்ள அறை முன்பு நடிகர் விஜய்யின் படுக்கை அறையாக இருந்தது. அங்கு விஜய் தங்கியிருப்பார் என்று கருதியே விஷமிகள் இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். உண்மை குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் தி.மு.க. வெற்றி பாதிக்கப்படுமோ என்ற எண்ணத்தில் ஆளுங்கட்சி தரப்பு விஜய் தலைமை ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன் மூலம் காய் நகர்த்தியது. ஆனால் அது எடுபடவில்லை. திரையுலகில் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தை ஒழிக்க ஒரே வழி அ.தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்தார். இதனால் ஜெயசீலன் வடசென்னை மாவட்ட செயலாளர் ஓவியர் ராஜா உள்ளிட்ட சில நிர்வாகிகள் தி.மு.க.வுக்கு சென்று வேலை செய்தனர். அவர்களை விஜய் மன்றத்தை விட்டு நீக்கினார். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததற்கு நடிகர் விஜய்யை மிரட்டவே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.