எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.23 - சென்னையில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அஸ்வின் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணியோ துவக்கத்தில் ரன்களைக் குவிக்க முடியாமல் தடுமாறியது.முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தப்போட்டிக்காக 11 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி 2 தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
ஹென்ரிக் டெஸ்டில் அறிமுகம் ஆனார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து சுழற்பந்து வீரர் ஒஜா நீக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்டிலும் விளையாடிய அவர் ஹர்பஜன்சிங்குக்காக கழற்றிவிடப்பட்டார். ஹர்பஜன்சிங்குக்கு 100வது டெஸ்ட் ஆகும். வேகப்பந்து வீரர்களில் இஷாந்த்சர்மா, புதுமுக வீரர் புவனேஸ்வர்குமார் இடம் பெற்றனர். தொடக்க வீரராக தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் தேர்வானார்.
சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் துவங்கியது.
நேற்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கோவனும் வார்னரும் களமிறங்கினர். இருவரும் மிக நிதானமாக ரன்கள் எடுத்து வந்தனர். ஆஸ்திரேலிய அணி 64 ரன்களை எடுத்திருந்த நிலையில் கோவன் ஆட்டமிழந்தார். அவர் 45 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்த வார்னருடன் ஹியூஸ் கை கோர்த்தார். ஆனால் ஹியூஸ் சிறிது நேரம் கூட நிற்கவில்லை. அந்த அணி 72 ரன்களை எட்டிய நிலையில் அஸ்வின் பந்து அவுட் ஆனார். 15 பந்துகளை சந்தித்த ஹியூஸ் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். களத்தில் தொடர்ந்து நின்ற வார்னருடன் வாட்சன் இணைந்தார். இருவரும் இணைந்து 50 ரன்கள் வரை சேர்த்தனர். 34.4 வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 126 ரன்களை எடுத்திருந்த நிலையில் வாட்சன் அவுட் ஆனார். வாட்சனைத் தொடர்ந்து கேப்டன் கிளார்க் களத்துக்கு வந்தார். கிளார்க்கும் வார்னரும் இணைந்து கூடுதலாக 5 ரன்களை எடுத்த நிலையில் வார்னர் அவுட் ஆகி வெளியேறினார். அவர் மொத்தம் 93 பந்துகளை சந்தித்து 59 ரன்களை சேர்த்திருந்தார். இதைத் தொடர்ந்து கிளார்க்குடன் வேட் கை கோர்த்தார். அவர் நீண்ட நேரம் நிலைத்து ஆடவில்லை. 35 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்து அவுட் ஆனார். 47 வது ஓவரில் ஆஸ்திரேலியா அணியால் 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இவர்கள் அனைவரின் விக்கெட்களையும் அஸ்வின் சாய்த்தார். ஸ்டார்க் 3 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார் .
47வது ஓவரின் போது அஸ்வின் 18 ஓவர்களை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். ஹர்பஜன்சிங் உட்பட மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை.
95 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணியில் கிளர்க் சதம் அடித்தார். அவர் 169 பந்துகள் எதிர்கொண்டு 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிட்டில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இரு அணி வீரர்கள் வருமாறு:
இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், முரளி விஜய், புஜாரா, தெண்டுல்கர், வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஹர்பஜன்சிங், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா.
ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), வார்னர், எட்கோவன், ஹியூக்ஸ், வாட்சன், வாடே, ஹென் ரிக்ஸ், பீட்டர் சிடில், மைக்கேல் ஸ்டார்க், பேட்டின்சன், நாதன் லயன்.
நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), எராமஸ் (தென் ஆப்பிரிக்கா). டெவிலிசன் நடுவர்: குல்கானி (இந்தியா). மேட்ச் நடுவர்: பிராட் (இங்கிலாந்து).
ரசிகர்கள் கூட்டம் குறைவு:
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்றைய ஆட்டத்தின்போது இந்தியாஆஸ்திரேலியா அணிகள் மோதின. 4 ஆண்டுக்கு பிறகு சென்னையில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய போட்டியை காண ரசிகர்களின் இடையே ஆர்வம் இல்லை. ரசிகர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஸ்டேடியத்தின் பெரும்பாலான கேலரிகள் வெறிச்சோடி கிடந்தது. குறைந்த அளவிலேயே ரசிகர்கள் இருந்தனர். சேம்பாக்க ஸ்டேடியத்தில் 45 ஆயிரம் இருக்கைகள் உள்ளன.
ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதால் ரசிகர்களின் கூட்டம் குறைவாக இருந்ததாக கருதப்படுகிறது. இந்தியா பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் திரளாக குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும்(சனி)நாளையும் , (ஞாயிற்றுக் கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.