எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.14 - மீனவர்கள் ஆழ்கடலில் தொழில் செய்ய வசதியாக நாகை மாவட்டம், பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் ஒன்றினை ரூ.78.50 கோடியில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அப்பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.6.67 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மீனவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மீனவர்களுக்கு உற்ற பாதுகாவலராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
மீன்வளத்தை மேம்படுத்தவும், மீன்வளத்தைப் பெருக்குவதில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மீனவர்களின் வருவாய் மேம்பாடு அடையச் செய்வதற்கும், மீன்வளக் கல்வியை ஊக்குவிப்பது மிக அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு நாகப்பட்டினம் தாலுக்காவில பனங்குடி மற்றும் நாகூர் முட்டம் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மீனவளப் பல்கலைக் கழகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்களை முழுமையாக பயன்படுத்தி மீன்பிடிப்பை அதிகப்படுத்துவதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய மீன் விதைப் பண்ணைகளை தமிழகத்தில் 11 இடங்களில் 37 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். மேலும், சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கு ஏற்றவாறு ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலர்தளம், உட்புற சாலை வசதி, தெரு விளக்கு வசதி, தண்ணீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்களை 63 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அரசு-தனியார் ஒத்துழைப்பின் மூலம் 13 மீன்பிடி நகரங்களின் மீன் பதப்படுத்தும் பூங்காக்களை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்து, அதன் அடிப்படையில் முன் மாதிரியாக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் பயன்பெறும் வகையில், கடலூர் மாவட்டம் பெரிய கங்கணாங்குப்பம் கிராமத்தில் 1.94 ஏக்கர் நிலப்பரப்பில் 14 கோடி ரூபாய் செலவில் மீன் பதனிடும் பூங்கா ஒன்றும், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கிராமத்தில் 2.19 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 23 கோடி ரூபாய் செலவில் மீன் பதனிடும் பூங்கா ஒன்றும், என இரண்டு மீன் பதனிடும் பூங்காக்களை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
தற்போது ஆழ்கடல் மின்பிடித் தொழிலுக்கு ஏற்ற படகுகளை நிறுத்தி வைக்கும் வசதி போதுமானதாக இல்லாததும், பதப்படுத்துதல், சேமிப்பு சந்தை வசதிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் மீன் உற்பத்தியை அதிகரிப்பதில் தடையாக உள்ளதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாகப்பட்டினம், பழையாறு, பூம்புகார், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள மூக்கையூர் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், மீன்பிடித் தொழில் அதிக அளவில் நடைபெறும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பூம்புகாரில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியினை விரைவாக தொடங்கிடும் வகையில் முதற்கட்டமாக 6 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் பூம்புகார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மீனவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.