எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மார்ச். 16 - தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கப்பட்டதையொட்டி அவன் தூக்கிலிடப்பட்டான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில் இருந்து பாகிஸ்தான் விலகிக் கொள்ள வேண்டும். தேசிய அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவது போலாகும்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஆக்கிரமிப்புக்குள்ளான அனைத்து பகுதிகளும் இந்தியாவின் ஒரு பகுதியே என்றும் இந்திய பாராளுமன்ற இரு சபைகளிலும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தான் முற்பட்டால் அதை தேசம் முழுவதும் ஒருங்கிணைந்து கடுமையாக எதிர்க்கும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றம் முழுமையாக நிராகரிக்கிறது என்று பாராளுமன்ற லோக்சபையில் சபாநாயகர் மீராகுமார் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதை வாசித்தார்.
இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவதை பாராளுமன்றம் அடியோடு நிராகரிக்கிறது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் இருந்து பாகிஸ்தான் முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக தங்கள் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. இதை உறுதியாக பின்பற்றினால்தான் பாகிஸ்தானுடன் அமைதியான உறவுக்கு ஒரு அடிப்படையாக அமையும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் அப்சல் குருவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறித்து பிரச்சினையை பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான யஸ்வந்த்சின்ஹா எழுப்பி பாகிஸ்தான் தேசிய அசெம்பிளி நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு சரியான பதிலடியை இந்த சபை கொடுக்க வேண்டும் என்றார். ஜம்மு - காஷ்மீர் மாநில மக்களை தூண்டும் வகையில் இந்த தீர்மானத்தை பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு அரசு கவலையடைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றும்படி லோக்சபை சபாநாயகர் மீராகுமாரை கேட்டுக் கொண்டார். ராஜ்யசபையிலும் பாகிஸ்தான் தேசிய அசெம்பிளி தீர்மானத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசுகையில்,
பாகிஸ்தானுடன் சமாதான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தானின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். இந்திய பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் அரசியல்பூர்வமாக அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் அந்த நாட்டுடன் உறவு சீரடையாது என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.
பாகிஸ்தான் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது மட்டுமல்லாது, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கும் அந்த நாடு இந்த தீர்மானம் மூலம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாராளுமன்றத்தில் பாகிஸ்தானை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
கடந்த 14 ம் தேதி பாகிஸ்தான் தேசிய அசெம்பிளியில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பாராளுமன்றம் அடியோடு நிராகரிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக தங்கள் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ஏற்கனவே உறுதியளித்துள்ளது. இந்த உறுதி அடிப்படையில்தான் இரு நாடுகளிடையே அமைதியான சூழ்நிலை ஏற்படும். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது இரு சபைகளும் அடியோடு நிராகரிக்கிறது. இந்த மாதிரி தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக ஒதுங்கி கொள்ள வேண்டும்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகள் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதியே என்று பாராளுமன்றத்தின் இரு சபைகளும் உறுதி செய்கின்றது. இது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். இந்தியாவின் எந்த பகுதியிலாவது தலையிட்டால் அதற்கு ஒருங்கிணைந்து சரியான பதிலடியை கொடுப்போம். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.