எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.19 - பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா தொடர்பாக நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். இதனால் நாடே கொதித்தெழுந்தது. தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தியா கேட்டில் ஆண்களும் பெண்களும் கூடி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஜனாதிபதி மாளிகையையே முற்றுகையிட முற்பட்டனர். இந்தநிலையில் அவர்களை ஒரு வழியாக சமாதானப்படுத்தப்பட்டது. டெல்லி சம்பவத்தையடுத்தும் பல இடங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஆசிட் வீசுதல், மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தல், வரதட்சணை ஆகிய கொடுமைகளாலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்கும் வகையில் பாலியல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. அதாவது பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தது 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவது. பாலியல் கொடுமைகளால் பெண்கள் இறந்துவிட்டால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் வகையில் பாலியல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கு பாலுறவு வயதை 18 வயதில் இருந்து 16 வயதாக குறைக்கவும் அந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த மசோதாவை இந்தநிலையில் ஆதரிக்க மாட்டோம் என்று பாரதிய ஜனதா, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இருந்தபோதிலும் இந்த மசோதா நிறைவேறும் அளவுக்கு ஆதரவு இருந்தாலும் அதிக ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதனால் அனைத்துக்கட்சி கூட்டத்தை நேற்று மத்திய அரசு கூட்டியது. கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. குறிப்பாக இந்த மசோதாவில் பாலுறவு வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க கடும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சட்ட திருத்த மசோதாவை யாரும் தவறுதலாக பயன்படுத்திவிடக்கூடாது என்றும் கூட்டத்தில் பல தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர். அதனால் பாலுறவு வயது குறித்து பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவின் நோக்கம் மற்றும் அதன் கருத்து குறித்து பெரும்பாலும் ஆதரவு தெரிவித்தாலும் அந்த மசோதாவில் உள்ள சில சரத்துக்களை வைத்து தவறுதலாக சில நேரங்களில் பயன்படுத்தக்கூடும் என்று பல தலைவர்கள் கருத்து தெரிவித்தனர் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார். பாலுறவு வயது ஏற்கனவே இருந்தபடி 18 வயதாகத்தான் இருக்கக்கூடாது அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 16 வயதாக குறைக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா, சமாஜ்வாடி மற்றும் இதர கட்சி தலைவர்கள் கூறினர். ஒரு சில கட்சி தலைவர்கள் பாலுறவு வயது 16 ஆக இருப்பது சரிதான் என்று கூறினர். இந்த சட்டத்திருத்த மசோதாவை அரசியல் எதிரிகள் மற்றும் குடும்ப பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்புவர்கள் தவறுதலாக பயன்படுத்த முடியாதபடி தகுந்த பாதுகாப்பு வேண்டும் என்று பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர் என்று கமல்நாத் கூறினார். இந்த மசோதாவில் தேவையான திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் எளிதாக நிறைவேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று கமல்நாத் கூறினர். இதுதொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் வரும் 22-ம் தேதிக்குள் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட வேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களின் கருத்தாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024