எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.30 - தமிழகத்தில் ஜாதி, மத மோதலற்ற போக்கை உருவாக்கி மாநிலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அமைதி நிலவச்செய்வார் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். மரக்காணம் பகுதியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும் முதல்வர் வழங்குவார் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இம்மாதம் 25ம் தேதி மாமல்லபுரத்தில் பாமகவினர் நடத்திய சித்திரை முழுநிலவு பெளர்ணமி விழாவையொட்டி அன்றைய தினம் மரக்காணம் பகுதியில் இரு சமூகத்தவரிடையே நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் குறித்த சிறப்பு கவனஈ்ர்ப்புத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். விவாத விவரம் வருமாறு:
பண்ருட்டி ராமச்சந்திரன்
(எதிர்க் கட்சி துணைத் தலைவர்): மரக்காணத்தில் இரு வகுப்பினரிடையே நடைபெற்ற மோதல் கவலை தரக்கூடியதாகும். இந்த சம்பவத்தில் யார் குற்றம் இழைந்திருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம்முடைய முதலமைச்சரை பொறுத்தவரை அவர் ஜாதியை பார்க்கமாட்டார். நீதியைத்தான் பார்ப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தவறு செய்தவர்கள் யார் எத்தகையவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற செயல்களை வளரவிடக்கூடாது. 1987ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அனைத்து ஜாதி தலைவர்களையும் அழைத்துப்பேசி சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியது போல நம்முடைய முதலமைச்சரும் அவர்களை அழைத்துப்பேசி உரிய முடிவு காண வேண்டும்.
க.பாலகிருஷ்ணன் (சிபிஎம்):
மரக்காணம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தை காவல்துறை நிதானமாக கையாண்டது வரவேற்கத்தக்கது. அவர்கள் எடுத்த நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் உள்ளது. சித்திரை விழாவுக்கு வந்தவர்கள் ஒருசிலர் செய்த தவறின் காரணமாக இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.இதுபோன்ற மோதல்களை திட்டமிட்டு ஏற்படுத்தும் சக்திகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணசேகரன் (சிபிஐ):
இந்தியாவிலேயே ஜாதிய முரண்பாடுகளை வேரறுத்த இடம் தமிழகம். தற்போது ஜாதியத்தை தலைதூக்கும் நடவடிக்கைகளில் சில சக்திகள் ்டுபடுகின்றன. அதை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
இந்த மோதலின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெ.குரு (பாமக):
மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்சனை தொடர்பாக சிஐடி விசாரணை, சிபிசிஐடி விசாரணை, சிபிஐ விசாரணை உள்ளிட்ட எந்த விசாரணைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விசாரணையின் முடிவில் நாங்கள் தவறு செய்திருந்ததாக நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் ஏற்க தயார். (மேலும், இந்த சம்பவம் குறித்து ஒரு சமுதாயத்தின் மீது ஜெ.குரு குற்றம் சுமத்தி பேசிய கருத்துக்கள் முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது இந்த விவாதத்தின் போது முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஜெ.குரு விவாதத்தில் ்டுபட்டார்.)
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி):
மரக்காணத்தில் நடைபெற்ற நிகழ்வு என்பது ஒரு சில தலைவர்கள் வரம்பும், பொறுப்புணர்வும் இல்லாமல் ஜாதி மற்றும் மதங்களை புண்படுத்தும் வகையிலும், உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் பேசியது தான் அடிப்படை காரணம்.
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது. முதலமைச்சரை பொறுத்தவரை இந்த பிரச்சனையில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பார். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்):
சித்திரை முழு நிலவு விழாவில் பேசியவர்கள் ஜாதி துவேசம் குறித்து பேசியததால் தான் மரக்காணத்தில் கலவரம் உண்டானது. இந்த சம்பவத்தில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர். பொதுச் சொத்துக்களும் நாசம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த தவறுகளை இழைத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.கு.தமிழரசன் (குடியரசு கட்சி):
தருமபுரி கலவரத்தின் சுவடு முடிவதற்குள்ளாகவே மரக்காணத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஜாதிய உணர்வுகளை அரசியலாக்கி ஆதாயம் தேடும் இப்படிப்பட்டவர்களின் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.நிச்சயமாக இந்த பிரச்சனையை முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவார் என்று நம்புகிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப