எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.2 - அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்தது மற்றும் சேலையூரைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரிடம் ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் பிரபல மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகரை போலீசார் தேடிவந்தனர்.பெங்களூரைச் சேர்ந்த இவர் தனது 19 வயதில் மோசடி வித்தைகளை தொடங்கினார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கைவரிசை காட்டி வருகிறார். அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சேத்துப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் விடுதலையாகி சென்னையில் தங்கி தனது மோசடி வேலையை மீண்டும் காட்டினார்.
சில மாதங்களுக்கு முன்னர் அம்பத்தூர் கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்ல சிவம் புகார் அளித்த பின்னர்தான் சுகாஷ், மீண்டும் இங்கு பதுங்கி இருந்து மோசடி செய்வது அம்பலமானது. மோசடி மன்னன் சுகாசை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் களமிறங்கினர். இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தராதேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சுகாஷ் தனது காதலியும் நடிகையுமான லீனாவின் டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார், நடிகை லீனாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆனால் சுகாஷ் சந்திரசேகர் நூலிழையில் போலீஸ் பிடியில் சிக்காமல் நழுவி ஓடிவிட்டார். அவர் டெல்லியில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்ட நடிகை லீனாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சுகாஷ் பற்றி லீனாவிடம் கேட்டபோது, அவரை நம்பி நான் ஏமாந்து போனேன் என்று கூறினார்.
பெரிய டைரக்டர் என்று கூறி என்னுடன் அறிமுகமான சுகாஷ், முன்னணி நடிகையாக்குவதாக கூறியதால், அவரது காதல் வலையில் நான் விழுந்துவிட்டேன் என்றும் போலீசிடம் தெரிவித்துள்ளார். லீனாவை கருவியாக பயன்படுத்தி தலைமறைவாக உள்ள சுகாசை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். லீனா சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பின்னரும், தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் டெல்லியிலேயே முகாமிட்டு சுகாசை தேடிவந்தனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. அவர் எங்கு பதுங்கினார் என்பது மர்மமாக உள்ளது. இதையடுத்து நேற்று காலையில் தமிழக போலீசார் சென்னை திரும்பினர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் சுகாஷ் டெல்லியை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். பக்கத்து மாநிலங்களில் நெருங்கிய நண்பர்கள் யாருடைய வீட்டிலாவது சுகாஷ் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து 2 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். சுகாஷ் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் சுகாஷ் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுகாஷ் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்த அவர், கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு சில வழக்குளில் மட்டுமே சுகாஷ் சிக்கியுள்ளார். தனக்குத்தானே பாதுகாவலர்களை வைத்துக் கொண்டு, விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்தபடியே வலம் வந்துள்ள சுகாஷ், தனி ராஜாங்கமே நடத்தி வந்துள்ளார். சொகுசு பேர்வழியான சுகாஷ், எப்போதும் விதவிதமான கார்களிலேயே சுற்றி வந்துள்ளார்.
இதற்காக மோசடி பணத்தில் விலை உயர்ந்த கார்களையும், வாங்கி குவித்துள்ளார். இதே போல கைகெடிகாரங்கள் மீது சுகாசுக்கு அளவு கடந்த மோகம் இருந்துள்ளது. இதனால் ரூ. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான கைக்கெடிகாரங்களையும் வாங்கி வைத்திருந்தார். தினமும் விதவிதமாக கைக்கெடிகாரங்களை அணிந்து அழகு பார்த்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் கைவரிசை காட்டிய நேரத்தில் முதல்- அமைச்சர் வீட்டின் செல்லப்பிள்ளை நான், எனக்கு எல்லா மாநிலங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது என்றும் சுகாஷ் கதை விட்டுள்ளார். இதை நம்பித்தான் பலர் ஏமாந்துள்ளனர்.
மோசடி பணத்தை தனது வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ள சுகாஷ், அதன் பின்னர் அதனை எந்தெந்த துறைகளில் முதலீடு செய்துள்ளார் என்பது பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஷேர் மார்க்கெட்டில் அவர் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றியும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுகாசின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுகாஷ் பற்றி மேலும் தகவல்களை திரட்டுவதற்காக லீனாவை போலீசார் காவலில் எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.