எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஜூன். 13 - சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கீந்தியத்தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 102 ரன்கள் எடுத்தார். ரவிந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றது. அரையிறுதியையும் உறுதி செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்தியா 39.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து வென்றது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் கெயில், சார்லஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே கெயில் அதிரடியாக விளையாட முற்பட்டார். முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும் புவனேஸ்குமார் வீசிய 5- வது ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்து களில் 21 ரன்கள் எடுத்தார். அடுத்து டேரன் பிராவோ, சார்லஸூடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். இதனால் 20 வது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது. 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த சார்லஸ், ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழ்ந்தார். சார்லஸ் ஆட்டமிழந்தது, இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த சாமுவேல்ஸ்(1ரன்), சர்வான்
(1ரன்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்தியத்தீவுகளின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. டேரன் பிராவோ 35 ரன்களிலும் கேப்டன் டேயன் பிராவோ 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். போல்லார்டு 32 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். ஆனால் மறுமுனையில் சமி நிலைத்து நின்றார். பின்வரிசையில் சுநீல் நரேன், ராம்பால் ஆகியோர் தலா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 45.3 ஓவர்களில் மேற்கீந்தியத் தீவுகள் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. சமி அதிரடி : கடைசி விக்கெட்டுக்கு கேமர் ரோச், சமி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இதில் சமி அதிரடியாக விளையாடினார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விளாசி 56 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். மறுமுனையில் ரோச் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார். சமியின் அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு 51 ரன்கள் கிடைத்தது. 200 ரன்களைக் கூட எட்டாது என்று இருந்த நிலை மாறி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது மேற்கிந்தியத்தீவுகள். ஜடேஜா 5 விக்கெட்: இந்திய அணி தரப்பில் ஜடேஜா 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். புவனேஸ்குமார், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தியா பதிலடி : இந்திய அணியின் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க முதலே இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் 16- வது ஓவரில் இந்தியா 100 ரன்களைக் கடந்தது. அதே ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. ரோஹித் சர்மா 56 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கோலி 22 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஷிகர் தவனுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது. மழையால் தடைபட்டது: இந்திய அணி 35.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்த போது மழை பெய்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ஷிகர் தவான் சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார். அவர் 107 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் அடங்கும். 40 - வது ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக், பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 54 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 15 - ம் தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இரண்டாவது சதம்:
இத்தொடரில் ஷிகர் தவன் தொடர்ந்து எடுத்துள்ள 2 - வது சதம் இது. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 94 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.