எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர்,ஆக. 12 - அரியானாவில் 8 ஆண்டு காலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி அளவுக்கு நில மோசடி நடைபெற்றது. இந்த ஊழலில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு பெரும் பங்கு உண்டு என ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா 100 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால் பா.ஜ.க.வின் கைப்பாவையாக கெம்கா செயல்படுகிறார் என்கிறது காங்கிரஸ். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. அரியானா மாநில நகர மற்றும் ஊரக திட்டதுறையின் அனுமதி பெற்று நிலத்தை கையகப்படுத்தி பெரிய நிறுவனங்களுக்கு ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி விற்பனை செய்துள்ளது. இதில் பல நில பரிவர்த்தனைகள் மோசடியானவை. ஓம்காரேஸ்வர் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் நிலத்தை வாங்கியுள்ளது. குறுகிய காலத்திலேயே அந்த நிலத்தை டி.எல்.எப். நிறுவனத்திற்கு ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் விற்று விட்டது. இதே போல பல முறைகேடுகள் நடந்துள்ளன. சம்பந்தப்பட்ட இலாகாவின் உயரதிகாரியாக இருந்த அசோக் கெம்கார் இந்த பரிவர்த்தனைகளை ரத்து செய்து விட்டார். சொத்து விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதற்குரிய பணத்தை முழுமையாக செலுத்த வேண்டும். அல்லது குறிப்பிட்ட தொகையை பணமாக செலுத்தி விட்டு எஞ்சிய தொகையை எப்போது செலுத்துவது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்க வேண்டும். ஆனால் ராபர்ட் வதேரா சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் பணமும் செலுத்தவில்லை. எழுத்துப்பூர்வமாக வாக்குறுதியும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலிட அழுத்தம் காரணமாக அசோக் கெம்கால் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு 100 பக்க விளக்க அறிக்கையை அசோக் கெம்கால் அனுப்பி வைத்துள்ளார். இதில் நில மோசடி ஊழல்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய விபரங்கள் வருமாறு:
நகர மற்றும் ஊரக திட்டமிடல் துறையிடம் இருந்து டி.எல்.எப். நிறுவனத்திற்கு நிலத்தை கைமாற்றுவதற்காக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டுள்ளது. இதன் மூலம் அது கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளது. ஒருஏக்கருக்கு ரூ. 15. 78 கோடி அளவுக்கு ராபர்ட் வதேரா முறைகேடாக சம்பாதித்துள்ளார். அரியானாவில் 2005 முதல் 2012 முடிய 21 ஆயிரத்து 366 ஏக்கர் நிலம் பரிவர்த்தனையாகி உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ. 15.78 கோடி என கணக்கிட்டால் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் ராபர்ட் வதேராவுக்கும் அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் தொடர்புள்ளது. வங்கி காசோலை எண்களும் போலியாக குறிப்பிடப்பட்டுள்ளன. ரூ. 7.5 கோடிக்கு ஸ்கைலைட் ஆஸ்பிட்டாலிட்டி வாங்கிய நிலம் குறுகிய காலத்தில் டி.எல்.எப். நிறுவனத்துக்கு ரூ. 58 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் வாங்கிய போது அந்த நிறுவனம் செலுத்திய மூலதனம் ரூ. ஒரு லட்சம் மட்டுமே. அதில் செலவாக ரூ. 43 ஆயிரம் மட்டும் காட்டப்பட்டுள்ளது. எனவே பெருந்தொகை கொடுத்து ஸ்கைலைட் நிறுவனம் நிலத்தை வாங்கியது மோசடி செய்வதற்காகத்தான் என்பது புலனாகிறது. இந்த ஸ்கைலைட் நிறுவனம் இடைத்தரகராக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தை குவித்துள்ளது என்று அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்ஸல் மறுப்பு தெரிவித்துள்ளார். கெம்காவுக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளதை உணருகிறேன். எதிர்க்கட்சிகளின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார். உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்த துர்கா சக்தி நாக்பாலை காங்கிரஸ் ஆதரித்தது. இந்த சமயத்தில் கெம்காவை பா.ஜ.க. தூண்டி விட்டுள்ளது. அவர் வதேரா மீது சரமாரியாக புகார் கூறி பேட்டியளித்துள்ளார். வதேரா நில விவகாரம் தொடர்பாக கெம்கா தனது பதிலைத்தான் அறிக்கையாக அளித்துள்ளார். அவர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவில்லை. அறிக்கைக்கும் பதிலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இப்புகார் தொடர்பாக அரியானா அரசு அமைத்த 3 பேர் குழு விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. அதில் கெம்காவின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல