எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.- 16 - 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. கவர்னர் பர்னாலா இன்று பகல் 12.15 மணிக்கு பதவியேற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
அமைச்சர்கள் பட்டியல் விவரம் வருமாறு: 1. ஜெ.ஜெயலலிதா(ஸ்ரீரங்கம்)- முதலமைச்சர் -பொதுத்துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., மாவட்ட வருவாய் அதிகாரிகள், போலீஸ் மற்றும் உள்துறை.
2. ஓ.பன்னீர்செல்வம்(போடிநாயக்கனூர்)-நிதியமைச்சர்-நிதித்துறை, திட்டம், சட்டமன்றம், தேர்தல் மற்றும் பாஸ்போர்ட். 3. கே.ஏ.செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம்)-விவசாயத்துறை அமைச்சர்-விவசாயம், விவசாய தொழில்நுட்பம், சர்க்கரைத்துறை, தரிசுநிலமேம்பாடு.
4. நத்தம் ஆர்.விஸ்வநாதன்(நத்தம்)-மின்துறை மற்றும் கலால்துறை அமைச்சர்-மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, கலால்துறை.
5. கே.பி.முனுசாமி(கிருஷ்ணகிரி)-உள்ளாட்சி மற்றும் ஊரகமேம்பாட்டுத்துறை அமைச்சர்-உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை, பஞ்சாயத்து, ஊரக குடிநீர் திட்டம்.
6. சி.சண்முகவேலு(மடத்துக்குளம்)-தொழில்துறை அமைச்சர்-தொழில் நிறுவனங்கள், ஸ்டீல் கட்டுப்பாடு, சுரங்கம் மற்றும் தாதுப்பொருள்கள் துறை.
7. ஆர்.வைத்திலிங்கம்(ஒரத்தநாடு)-வீட்டு வசதி மேம்பாட்டு துறை அமைச்சர்-வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு துறை, குடிசை மாற்றுவாரியம், நகர அபிவிருத்தி திட்டம், சி.எம்.டி.ஏ.
8. அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(கலசபாக்கம்)-உணவுத்துறை அமைச்சர்-உணவு, சிவில் சப்ளைஸ், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு.
9. சி.கருப்பசாமி(சங்கரன்கோவில்)-கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர்-கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை.
10. பி.பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி)-உயர்கல்வித்துறை அமைச்சர்-உயர்கல்வித்துறை, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
11. சி.வி.சண்முகம்(விழுப்புரம்)-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்-பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல்.
12. செல்லூர் கே.ராஜு(மதுரை மேற்கு)-கூட்டுறவுத்துறை அமைச்சர்-கூட்டுறவுத்துறை, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை.
13. கே.டி.பச்சம்மாள்(கன்னியாகுமரி)-வனத்துறை அமைச்சர்-வனத்துறை மற்றும் காடுவளர்ப்புத்துறை.
14. எடப்பாடி கே.பழனிச்சாமி(எடப்பாடி)-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்-நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்.
15. எஸ்.பி.சண்முகநாதன்(ஸ்ரீவைகுண்டம்)-இந்து அறநிலையத்துறை அமைச்சர்-இந்து அறநிலையத்துறை, தமிழ் கலாச்சாரம்.
16. கே.வி.ராமலிங்கம்(ஈரோடு மேற்கு)-பொதுப்பணித்துறை அமைச்சர்-பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம், திட்டப்பணிகள்.
17. எஸ்.பி.வேலுமணி(தொண்டாமுத்தூர்)-சிறப்பு திட்ட பணிகள் அமைச்சர்-தேர்தல் அறிக்கை குறித்த சிறப்பு திட்ட பணிகள்.
18. டி.கே.எம்.சின்னையா(தாம்பரம்)-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள், அகதிகள் துறை.
19. எம்.சி.சம்பத்(கடலூர்)-ஊரக தொழில்துறை அமைச்சர்-ஊரக தொழில்துறை, சிறு, குறு தொழில்கள்.
20. பி.தங்கமணி(குமாரபாளையம்)-வருவாய்த்துறை அமைச்சர்-வருவாய், மாவட்ட வருவாய் மேம்பாடு, துணை கலெக்டர்கள், எடை பொருட்கள், சிட் பண்ட் மற்றும் கம்பெனிகள் பதிவு.
21. ஜி.செந்தமிழன்(சைதாப்பேட்டை)-செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்-செய்தி மற்றும் விளம்பரத்துறை, ஊடகத்துறை, அச்சு மற்றும் எழுதுபொருள், அரசு அச்சகங்கள், சினிமா துறை.
22. எஸ்.கோகுலஇந்திரா(அண்ணாநகர்)-வணிக வரித்துறை அமைச்சர்-வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு.
23. செல்வி ராமஜெயம்(புவனகிரி)-சமூகநலத்துறை அமைச்சர்-சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், சத்துணவு, ஆதரவற்றோர் இல்லம்.
24. பி.வி.ரமணா(திருவள்ளூர்)-கைத்தறித்துறை அமைச்சர்-கைத்தறி, காதி கிராம கைத்தறி துறை.
25. ஆர்.பி.உதயகுமார்(சாத்தூர்)-தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர்-தகவல் தொழில்நுட்ப துறை.
26. என்.சுப்பிரமணியம்(கந்தர்வகோட்டை)-ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்-ஆதி திராவிடர் நலத்துறை, மலைவாழ் மக்கள்,கொத்தடிமைகள் நலத்துறை.
27. வி.செந்தில்பாலாஜி(கரூர்)-போக்குவரத்து துறை-போக்குவரத்து துறை, மோட்டார் வாகனங்கள் சட்டம்.
28. என்.மரியம் பிச்சை(திருச்சி மேற்கு)-சுற்றுச்சூழல் துறை அமைச்சர்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, வக்பு வாரியம்.
29. கே.ஏ.ஜெயப்பால்(நாகப்பட்டினம்)-மீன்வளத்துறை அமைச்சர்-மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் மேம்பாட்டு கழகம்.
30. ஈ.சுபையா(அம்பாசமுத்திரம்)-சட்டத்துறை அமைச்சர்-சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைகள், நிர்வாக சீரமைப்பு.
31. புத்திசந்திரன்(உதகமண்டலம்)-சுற்றுலாத்துறை அமைச்சர்-சுற்றுலா, சுற்றுலா மேம்பாட்டு கழகம்.
32. எஸ்.டி.செல்லபாண்டியன்(தூத்துக்குடி)-தொழிலாளர் துறை அமைச்சர்-தொழிலாளர், மக்கள் தொகை, நகர்ப்புற மற்றும் ஊரக வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலம் மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு.
33. டாக்டர் வி.எஸ்.விஜய்(வேலூர்)-சுகாதாரத்துறை அமைச்சர்-சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை.
34. என்.ஆர்.சிவபதி(முசிறி)-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.
தி.மு.க. அமைச்சரவையில் சபாநாயகராக பொறுப்பு வகித்த ஆவுடையப்பனை வீழ்த்திய ஈ.சுப்பையாவுக்கு சட்டத்துறையும், உயர்கல்வித்துறை அமைச்சரான க.பொன்முடியை வீழ்த்திய சி.வி.சண்முகத்திற்கு பள்ளி கல்வித்துறையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கு எஸ்.பி.வேலுமணி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.