எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.23 - விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ35 .77 .கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_
கல்வியில் மேன்மை, விளையாட்டுப் போட்டிகளில் திறமை ஆகிய இரண்டும் இளைஞர் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. கல்வியின் மேன்மை அறிவாற்றலை வளர்க்கும். விளையாட்டுத் திறமை உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும். அறிவார்ந்த மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டும் இன்றியமையாதது என்பதால், இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
விளையாட்டு விடுதிகள் துவக்குதல், தினப் பயிற்சி திட்டத்தின் மூலம் வீரர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தல், பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதற்காக பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கு கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத் தொகை வழங்குதல், உள்விளையாட்டு அரங்கங்களை அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துதல், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 100 இடங்களை 500 ஆக உயர்த்தியது, மாற்றுத் திறனாளிகளுக்கிடையே உள்ள விளையாட்டுத் திறமையை வெளிக் கொணர்வதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
சர்வதேச விளையாட்டரங்கில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் ஆலோசனைப்படி விஞ்டான முறையில் விளையாட்டின் தன்மையின் அடிப்படையில் சத்தான சமச்சீர் உணவு வழங்கப்படடு வருவது அவர்களின் வெற்றிக்கு மூலக் காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகள் நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்பொழுது நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையான 75 ரூபாயை 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 10 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு உணவுக்காக நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவியருக்காக தனித்தனியாக சிறப்பு விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 90 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் முதன்மை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி, நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 250 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக தேவைப்படும் செலவினத்திற்காக கூடுதலாக 55 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டின்போது ஹாக்கி போட்டிகள் நடத்துவதற்காக செயற்கை இழை வளைகோல்பந்து ஆடுகளம் 1995 ஆம் ஆண்டு மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆடுகளம் 2004 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இநத ஆடுகளம் சீரமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டப்படியால், தற்பொழுது இந்த ஆடுகளம் வழுக்கும் தன்மையுடையதாக உள்ளதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும், வருங்காலங்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளை கருத்திற் கொண்டும், செயற்கை இழை ஆடுகளத்தினை 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்டவையாதாலால் அவைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கட்டமைப்புகளை புதுப்பிக்கவும் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஒரு முறை சிறப்பு மானியமாக5 கோடி ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளிக்கல்வி பயிலும் 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர்தரமான பயிற்சி அளிப்பதற்காக, சென்னை நேரு விளையாட்டரங்கில் சிறுவர்களுக்காகவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறுமியர்களுக்காகவும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்கள் துவக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இதேபோன்று உலகத்தரம் வாய்ந்த முதன்மை விளையாட்டு மையங்களை ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய 3 இடங்களில் துவக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 7_வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக சென்னையில் நவீனமயமாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், உள்விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் வளைகோல்பந்து விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல்குள வளாகம், டென்னிஸ் விளையாட்டரங்கம் போன்ற விளையாட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. சமீபத்தில் நேரு உள்விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் இயற்கை புல்வெளி கால்பந்து திடல் வசதிகள் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் மேலும் பயன் அடைவதற்காக ஸ்குவாஷ் அரங்கம், இறகு பந்து உள்ளரங்கம், கையுந்து பந்து, கூடை பந்து ஆடுகளங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஒன்றினை 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் போது, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வசதியாக தங்குவதற்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக்கூட வசதிகள் ஏற்படுத்திட 3 கோடி ரூபாய் நிதியினை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட உத்தரவுகளின்படி விளையாட்டு மேம்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 35 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழ்நாடு தேசிய மாணவர் படை இயக்குநரகம் நாட்டிலுள்ள தேசிய மாணவர் படையில் மூன்றாவது பெரிய இயக்குநரகமாகும். 300 கல்லூரிகள் மற்றும்
600 பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை உள்ளடக்கிய இயக்கமாகும். நமது தேசிய மாணவர் படையினர் புதுடில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்று அங்கு நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு 11 முறை பரிசுகள் பெற்றுள்ளனர்.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய மாணவர் படை பயிற்சித் திட்டத்தின்படி, ஆளுமை மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் ராணுவத்தில் சேருவதற்கான தகுதிகளுடன் கூடிய உயர் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியினை தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர்களுக்கு அளிப்பதற்கென்று தனியாக பயிற்சி அகாடமி ஒன்றினை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி கிராமத்தில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமியை அமைப்பதற்கு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப