எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 24 - வருகின்ற 26-ந்தேதி தமிழக சட்டசபைக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்கான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கல் செய்யலாம். அடுத்த நாள் 27-ந்தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று இன்றைய சபாநாயகர் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வரலாற்று புகழும், பாரம்பரிய பெருமையும் உடைய தமிழகத்தின் பதினான்காவது சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற, மேதினியே வியக்கும் வண்ணம் ஒரு மெளன புரட்சியை நடத்தி, மிகப்பெரிய மகத்தான வெற்றியை பெற்று, ஏழுகோடி தமிழ் மக்களின் உள்ளமெலாம் நிறைந்து, அவர்தம் இல்லமெங்கும் மகிழ்ச்சி சுடரை ஏற்றி, பெரும்புகழ் ஈட்டியிருக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு, அடித்தளத்து மக்களின் ஆனந்தசுவாச காற்று, நலிந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான முதல்வரையும், அமைச்சர் பெருமக்களையும், உறுப்பினர்களாகிய உங்கள் ஒருவ்வொரரையும் நான் அன்போடு வரவேற்கிறேன். மக்கள் சேவையின் மகத்தான பணிக்கு முழுமையாக அர்ப்பணித்து தமிழக மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். ஜனநாயக முறையில் அமைதியாக தேர்தல் நடைபெற ஒத்துழைத்த பொதுமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதினான்காவது சட்டமன்ற பேரவையின் உறுப்பினர்களாக பதவியேற்க இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணத்தால், உழைப்பால் தமிழக மக்களின் வாழ்விற்கும், வளத்திற்கும் மேலும், பெருமை சேர்க்க வேண்டுமென்று என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்புமிக்க இப்பேரவைக்கு ஒரு தலைவரை இப்பேரவை தேர்ந்தெடுக்கின்றவரையில் ஆற்ற வேண்டிய முன் அலுவல்களை நிறைவேற்றுவதற்கென என்னை இப்பேரவையின் தற்காலிக தலைவராக ஆளுநர் நியமித்திருக்கிறார்கள். அதற்காக ஆளுநருக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில், பேரவைக்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம் இப்பேரவையின் அலுவலர்களை ஏற்று நடத்துவதற்கு முன், இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, அதற்குரிய உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை இன்று நிறைவேற்றுவதற்காகவும், பேரவை தலைவர் தேர்தலை நடத்துவதற்காகவும் ஆளுநர் என்னை பணித்துள்ளார்.
முதலில் முதல்வர் மற்றும் அமைச்சர்களையும், பிறகு செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் சட்டமன்ற கட்சி தலைவர்களையும், அடுத்து முன்னாள் முதலமைச்சரையும், முன்னாள் துணை முதலமைச்சரையும், முன்னாள் அமைச்சர்களையும், அரசு தலைமை கொறடாவையும், பிறகு தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர் பெருமக்களையும் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ள சட்டமன்ற பேரவை செயலாளர் அழைப்பார். அவ்வாறு அழைக்கப்பெற்றவுடன் ஒவ்வொருவராக வந்து சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்எதடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை சட்டமன்ற பேரரை செயலாளவிடம் கொடுக்க வேண்டும்.
உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கான வாசகங்கள் அடங்கிய படிவம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும்: அதில்,
உளமாற உறுதி கூறுகிறேன் - என்றும், கடவுளறிய உறுதி கூறுகிறேன் - என்றும், இரண்டு வாசகங்கள் இருக்கும். உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி ஏதாவது ஒரு முறையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். மேலும், இப்படிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். உறுப்பினர்கள் தம் விருப்பப்படி ஏதாவது ஒரு மொழியில் (அதாவது தமிழ் அல்லது ஆங்கிலத்தில்) உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்போது படிவத்திலுல்ள வாசகங்களை மட்டுமே படிக்க வேண்டும். அதை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.
உறுதிமொழி எடுத்துக் கொண்டபின் உறுப்பினர்கள் அந்த படிவத்தில் கையெழுத்திட்டு செயலாளரிடம் கொடுக்க வேண்டும். அதற்கு பிறகு செயலாளரின் மேஜைக்கு இடப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவேட்டில் கையொப்பம் இடுதல் வேண்டும்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி எடுக்கப்படவேண்டிய உறுதிமொழியை நான் ஏற்கெனவே 22.5.11 அன்று ஆளுநர் முன்னிலையில் எடுத்துக் கொண்டுவிட்டதால், இப்போது நான் முதலில் உறுப்பினர் பதிவேட்டில் விதிகளில் குறித்துள்ளபடி பேரவை செயலாளர் முன்னிலையில் கையெழுத்திடுகிறேன்.
உறுதிமொழி எடுக்கும் கடமை மகிவும் புதினமானது. எனவே, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி முழுவதும் நிறைவேறும் வரை எல்லா உறுப்பினர்களும் பேரவையில் அமைதியாக அமர்ந்து இருக்குமாடு கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது அமைச்சர்களை தவிர மற்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் அமருவதற்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை. 27.5.11 அன்று தேர்த்தெடுக்கப்பட இருக்கின்ற பேரவைத் தலைவர் பேரவை விதிகளின்படி உறுப்பினர்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தருவார்கள்.
27.5.11 அன்று பேரவை தலைவர், பேரவைத் துணைத்தலைவர் தேர்தல்கள் இப்பேரவையில் நடைபெறும்.
பேரவை விதிகளின் கீழ் பேரவை தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளும் வேட்பாளர்களும், அவர்களை முன்மொழியும், வழிமொழியும் உறுப்பினர்களும் அச்சமயத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்றும், அதற்கான வேட்புத்தாள்களை செயலாளரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளபடி 26.5.11 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் வேட்புத்தாள்களை செயலாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இப்போது உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு செயலாளர், உறுப்பினர்களது பெயர்களை குறிப்பிட்டு அழைப்பார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.