எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியாமி, மார்ச் 25 - மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் கடும் போராட்டத்துக்குப் பிறகு காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் முன்னாள் முதல் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் லெய்டன் ஹெவிட்டை தோற்கடித்தார். மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தை 66 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார் நடால்.
வெற்றிக்கு பிறகு பேசிய நடால், “2012-லிருந்து இந்தப் போட்டி யில் விளையாடாத நிலையில் இப்போது மீண்டும் விளையாட வந்திருப்பது சிறப்பானது. எனது வருகையை தெரியப்படுத்த இதுபோன்ற ஒரு வெற்றியோடு தொடங்குவதைவிட சிறந்த வழி எதுவுமில்லை” என்றார்.
ஹெவிட்டுக்கு எதிராக தொடர்ந்து 6-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நடால், அடுத்ததாக உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை சந்திக் கிறார். இஸ்டோமின் தனது 2-வது சுற்றில் 6-7 (8), 6-0, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டிமிட்ரி துர்சுனோவை தோற்கடித்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-0, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேனியல் ஜிமெனோ டிரேவரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் வென்று 18 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த வாவ்ரிங்கா, அடுத்த செட்டை இழந்தார். அது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு மனரீதியாக சில ஏற்ற, இறக்கங்கள் இப் போதும் இருக்கின்றன. 2-வது செட்டில் நான் எதிர்மறையான எண்ணத்துடன் ஆடியது கொஞ்சம் முட்டாள்தனமானதுதான். எனினும் 3-வது செட்டை சிறப்பாகத் தொடங்கியதில் மகிழ்ச்சியே” என்றார்.
போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளவரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-6 (5), 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபர்ட்டையும், போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருப்பவரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-7 (5), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான டொனால்டு யங்கையும் தோற்கடித்தனர்.
போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து 3-வது சுற்றில் விளையாடவிருந்த ஜெர் மனியின் புளோரியன் மேயர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
போராடி வென்ற செரீனா
நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் கடும் போராட்டத் துக்குப் பிறகு 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவைத் தோற் கடித்தார். இந்த ஆட்டத்தின் 3-வது செட்டில் 5 கேம்கள் முடிந்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
மியாமி மாஸ்டர்ஸில் 7-வது பட்டம் வெல்லும் கனவில் இருக்கும் செரீனா, இந்தப் போட்டியில் 63-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இங்கு இதுவரை 70 போட்டிகளில் விளை யாடியிருக்கும் செரீனா 7-ல் மட்டுமே தோல்வி கண்டுள்ளார்.
கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான மரியா ஷரபோவாவும் கடும் போராட்டத்துக்குப் பிறகே தனது 3-வது சுற்றில் வெற்றி கண்டார். அவர் 6-4, 6-7 (7), 6-2 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவாவைத் தோற்கடித்தார். இந்த போட்டியில் ஷரபோவா 8 டபுள் பால்ட் தவறுகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
தகுதி நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வான் டேவெக் 5-7, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் 16-ம் நிலை வீராங் கனையான ஆஸ்திரே லியாவின் சமந்தா ஸ்டோசருக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
பூபதி ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஜோடி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த ஜோடி 4-6, 6-4, 6-10 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் பேயா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானக் ஜோடியும் முதல் சுற்றோடு வெளியேறிவிட்ட நிலையில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர், பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து விளையாடி வருகிறார். இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் கேபல்-ராபர்ட் ஃபராஹ் ஜோடியை சந்திக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.