முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணசாமியை எதிர்த்த சுயேட்சை வேட்பாளர் மீது தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை ஏப்.19 - தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமியை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரை 15 பேர் கொண்ட கும்பல் தாக்கிய காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சுயேட்சையாக மதுரை, சர்வேயர் காலனி, யமுனா தெருவைச் சேர்ந்த எஸ்.ராதா கிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார்.  மதுரையிலிருந்து தென்காசிக்கு பிரச்சாரத்திற்காக ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். 

நேற்று பகல் 11 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆர்.சி. தேவலாய சந்திப்பில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், ராதாகிருஷ்ணனை ஆபாசமா திட்டி, கிருஷ்ணசாமிக்கு எதிராக போட்டியிடக் கூடாது என்று கூறி மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்களாம். இதில் ராதாகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். மேலும் பணம் ரூ.47 ஆயிரத்தை எடுத்துக் கொண்டதுடன், வாகனத்திலிருந்து பொருட்களையும் எடு்த்துச் சென்று விட்டார்களாம்.

இது குறித்து ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தூண்டுதலின் பேரில் 15 பேர் கொண்ட கும்பல் தன்னைத் தாக்கி பணம், பொருட்களை எடுத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். காவல் சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ் வழக்குப் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர் சுந்தரபாண்டியன் விசாரணை மேற்கொண்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்