எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். 20 - தற்போது தி.மு.க.வில் கலைஞர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.தி.மு.க.விலே என்ன நடக்கிறது என்பதற்கு நான் ஏன் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பலர் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே சாட்சி என்று
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்திர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:_
அன்புக்குரிய நண்பர் ஆற்க்காடு வீராசாமி மூலம் தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27_ந் தேதி இலட்சிய தி.மு.க.விற்கு, தி.மு.க. கூட்டணியில் சீட்டு தருவதாக சொல்லி அழைத்திருந்தார்.
தே.மு.தி.க.வும், காங்கிரசும் இனி தங்களுடன் கூட்டணி சேராது என்று முடிவானதால் தி.மு.க தலைமை வேறுவழியின்றி ஆற்காட்டார் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தது.
என் முன்னாள் தலைவர், குரு, என்ற முறையில் அவரை சந்திக்க சென்றேன். நான் சென்றிருக்க கூடாது. சிலர் பார்வையில் அது குற்றம் ஆனால் நான் சென்றதற்கு காரணம் ஒரு குரு மீதுள்ள மரியாதை நிமித்தம். சூழ்நிலை கைதியாகத்தான் தி.மு.க தலைவரை சந்தித்தேன்.
ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும். பேசாமல் தி.மு.க.வில் இணைந்துவிடு என்றார். ஆனாலும், கூட இலட்சிய தி.மு.க.வை கலைத்து விட்டு தி.மு.க.விலே இணைய சொன்ன போது, கடந்த காலத்தில் தாயக மறுமலர்ச்சி கழகத்தை இணைத்து விட்டு ஏற்பட்ட கசந்த அனுபவத்தின் காரணமாக அதற்கு மறுத்து விட்டேன்.எனக்கு அப்போதுதான் அவரது எண்ணம் புரிந்தது. ஏற்கனவே இப்படிதான் திரும்பி வந்த என்னை தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைக்க சொல்லி தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார். கட்சியில் பெரிய பொறுப்பு தருவதாக கூறி கழற்றி விட்டார். அதனால், இந்த முறை நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுப்பு தெரிவித்து கூட்டணி மட்டும் வைத்துக் கொள்வோம். எங்களுக்கு 3 தொகுதிகளை மட்டும் தருமாறு கேட்டேன். அதற்கு யோசிப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டார்.கருணாநிதியுடனான சந்திப்பு பின்னணியை அப்போதே நான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துவிட்டேன். கருணாநிதியும் என்னை தி.மு.க.வில் இணைப்பது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், ராஜேந்தரை சேர்ப்பது குறித்து நான் முடிவு எடுத்து விட்டேன். ஆனால், கட்சியின் முடிவு பற்றி இன்னும் தெரியவில்லை என்ற தொனியில் அறிக்கை இருந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது கருணாநிதியால் முடிவு எடுக்க முடியவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி பிரச்னை அதிகம் உள்ளது. கருணாநிதியே முடிவு எடுத்துவிட்டபிறகு நான் தி.மு.க.வில் சேர்வதை தடுத்த சக்தி எது?
கலைஞர் அவர்களே தி.மு.க.வின் பிரசார பகுதியை பலப்படுத்துவதற்காக தம்பி டி.ராஜேந்தரை அழைத்தேன் தி.மு.க.விலே இணைக்க அழைப்பு கொடுத்தேன் என்று அவர் கைப்பட அறிக்கை கொடுத்தார்.நான் திமுகவில் இணையவில்லை. இணைந்த மாதிரி இருக்கும். ஆனால் இணையவில்லை. கருணாநிதி அணைத்த மாதிரி இருக்கும்.. ஆனால் அணைக்கவில்லை. நான் திமுகவில் சும்மா கை கட்டி நிற்க விரும்பவில்லை. அப்படி இருப்பதற்கு நான் ஏன் அங்கு போக வேண்டும். அங்கு ஏகப்பட்ட உட்கட்சி குழப்பம் இருக்கிறது. நான் லட்சிய திமுகவை ஒருபோதும் கலைத்துவிடவில்லை.
தி.மு.க.விற்கு பல இக்கட்டான சூழ்நிலை வந்தபோதெல்லாம் நான் கலைஞர் பக்கத்தில் இருந்து இருக்கின்றேன். இது கடந்த கால வரலாறு. இப்போதும் இந்த தேர்தல் களத்திலும் நான் கூட்டணியிலாவது இருக்க வேண்டும் என்று கலைஞர் நினைத்தார். ஆனால் தற்போது தி.மு.க.வில் கலைஞர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
தி.மு.க.விலே என்ன நடக்கிறது என்பதற்கு நான் ஏன் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பலர் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே சாட்சி! என்னை கலைஞர் தி.மு.க.வில் சேர்க்க நினைத்தார். ஆனாலும் நான் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக சேரவில்லை.
அதற்குள்ளே அவர்கள் கட்சிக்குள்ளே உள்கட்சி குழப்பம், இதிலே போய் களமிறங்கி நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான் என்று, என்னை இடவிடுவார்கள் முழக்கம்? இதற்குள்ளே அத்தனையும் அடக்கம்! இதன் மூலம் என்னை செய்து விட்டதாக சிலர் நினைக்கலாம் முடக்கம், ஆனால் என்னை பொறுத் தவரை இது ஒரு தொடக்கம்.
திரைப்படத்திற்கு கூட இரண்டு பாகம் உண்டு. என்னை பொறுத்தவரையில் முடிந்திருப்பது முதல் பாகம் இனிமேல் தான் இருக்கிறது இரண்டாம் பாகம்.
இந்த தேர்தல் காலம் ஒரு இடைவேளை எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு இலட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை
தி.மு.க.விலே களமிறங்கி கலைஞர் அவர்களும் அவரது மகன் தளபதி அவர்களும் செய்கிறார்கள் பிரசாரம் அவர்களிடத்தில் இருக்கிறது தெம்பு... அவர்கள் விடுகிறார்கள் அம்பு... பரவாயில்லை என்னிடத்திலும் இருக்கிறது. தெம்பு என்னிடத்திலும் இருக்கிறது அம்பு என்று நான் செய்யவில்லை வம்பு.
என்னதான் ஆட்டக்காரனாக இருந்தாலும் காலம் கைகொடுத்தால் தான் யாருமே களம் இறங்க முடியும். நான் தற்போது இந்த தேர்தலில் களம் இறங்காமல் இருந்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் எந்த நிலையிலும் தரம் இறங்கி போகமாட்டேன் இது நிச்சியம். அது தான் என் இலட்சியம்.அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் என்னுடைய சேவை தேவை என்று ஜெயலலிதா வெளிப்படையாக அழைத்ததால் பிரசாரத்திற்கு சென்றேன். இரு தொகுதியிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு நான்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. நானும் ஒரு காரணம் என்றுதான் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ