எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. பிப். 26 - மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை துவங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பாராளுமன்றத்தின் லோக் சபை ராஜ்ய சபை ஆகிய இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழத்தினார். அதன் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றன.
நேற்று பாராளுமன்றத்தின் லோக்சபையில் 2011 - 12 ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பயணிகளுக்கான மற்றும் சரக்குகளுக்கான கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படவில்லை.
2010 - 11 ம் நிதியாண்டில் ரயில்வே துறையின் வருமானம்ரூ. 1 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் மம்தா அறிவித்தார்.
வரும் 2011 - 12 நிதியாண்டில் இயக்க செலவுகள் ரூ. 87,000 கோடியாக இருக்கும் என்று இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓராண்டில் மிக அதிக தொகையாக 2011 - 12 ம் ஆண்டிற்கு திட்ட ஒதுக்கீடாக ரூ. 57, 630 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பத்திரங்கள் மூலம் ரூ. 10,000 கோடி திரட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலமான பொருளாதார நோக்கத்தை கொண்டதாக ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
பல்வேறு தொழில்துறைகளுக்கும் உதவும் வகையில் வர்த்தக நோக்கம் கொண்ட கொள்கைகள் உருவாக்கப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.
ரயில்வே திட்டங்களை நிறைவேறுவதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்புக்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே தொடர்பான தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆறாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றியதன் மூலம் கடந்த 2010 -11 நிதியாண்டில் ரயில்வே துறையின் செலவு 97 சதவீதம் அதிகரித்துள்ளது என்ழறும் இதே ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ. 3,500 கோடி இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காலியாக இருக்கும் 1.75 லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரயில்வே துறையில் 16,000 முன்னாள் ராணுவத்திற்கு வேலை வழங்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
ரயில்களில் பாதுகாப்புக்கு முதலாவது முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் ரயில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மேற்கு எல்லை மண்டலத்தில் ரயில் விபத்து தடுப்பு கருவிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இவை மேலும் 3 மண்டலங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒரு இடத்தில் ரயிலை நிறுத்தினால் அதன் பாதிப்பு மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ரயில்வே தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
2011 0 2012 180 கி. மீ. தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அகில இந்திய செக்கியூரிட் ஹெல்ப்லைன் ஒன்றும் அமைக்கப்படும்.
அலகாபாத் - மும்பை, புனே -அகமதாபாத்,சியால்டா - பூரி, செகந்திராபாத் - விசாககப்பட்டினம், மதுரை - சென்னை வழித்தடங்களில் புதிய தூரந்தோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மம்தா கூறினார்.
டெல்லி, மும்பையிலிருந்து குஜராத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்திற்காக புதிய இணைப்புகள் கொடுக்கப்படும் என்றும் என்றும் சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் ஒருங்கிணைந்த பறநகர் ரயில்கள் விடப்படும்.
பிரதான் மந்திரி ரயில் விகாஸ் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் ரயில்வே தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்றும் காஷ்மீர் மாநிலத்தில் ரயில்வே தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் மெட்ரோ கோச் பேக்டரி ஒன்று அமைக்கப்படும் என்றும் ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து அடுத்த மாதம் முதலாவது ரயில் பெட்டி வெளியேறும் என்றும் மம்த தெரிவித்தார்.
ஒரிஸ்ஸாவில் நில ஆர்ஜிதம் முடிந்த பிறகு சரக்கு ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான பணிகள் துவஙகும் என்றும் அவர் கூறினார்.
டார்ஜிலிங்கில் ரயில்வே துறைக்காக மென்பொருள் மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் சமூக நல திட்டங்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 31 ம் தேதிக்குள் 442 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் மும்பையில் ரயில் பாதைகள் ஓரம் வசிக்கும் மக்களுக்கு வீடில்லாத மக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் ஒன்றும் செயல்படுத்தப்படும் என்றும் மம்தா கூறினார்.
அகில இந்திய ரயில் பயணத்திற்கு பல நோக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விமான நிலையங்களில் பயன்படுத்துவது போன்ற டிராலிகள் மேலும் பல ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ரயில்வே துறையில் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வங்காள தேசத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் மூத்த குடிமக்கள் ரயில் சலுகைகளை பெறுவதற்கான வயது வரம்பு 60 லிருந்து 58 ஆகி குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வீரதீரச்செயல் விருது பெற்றவர்களுக்கு ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத குடும்ப பயன கட்டண சலுகை இனி வருடத்திற்கு இரு முறையாக அதிகரிக்கப்படும் என்றும் மம்தா கூறினர்.
ரயில்வே திட்டங்களுக்கு பாலங்களின் தேவை அதிகமாக இருப்பதால் பாலங்களை அமைப்பதற்கு தேவையான தளவாட பொருட்களை தயாரிக்க காஷ்மீரில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிர மாநிலம் தாக்கூரலி எனற இடத்தில் ரயில்வே துறைக்காக எரிவாயுவை பயன்படுத்தி 700 மெகாவாட் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வரும் நிதியாண்டில் ரயில்வே துறை மூலம் 99.30 கோடி டன் சரக்குகள் கையாளப்படும் என்றும் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கும் பன்வெல் ரயில் நிலையத்திற்கும் இடையே தினசரி 10 லட்சம் பேர் ரயில்களில் பயனம் செய்கிறார்கள் என்றும் மம்தா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.