எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - காங்கிரஸ் தி.மு.க. பேச்சு வார்த்தை இழுபறியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெளியில் சிரித்தமுகத்துடன் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம் என்று இரண்டு தரப்பும் கூறினாலும் உண்மையில் உள்ளே பெரும் குத்துவெட்டு நடந்து கொண்டுதான் உள்ளது. மறுபுறம் தே.மு.தி.க, அ.தி.மு.க. கூட்டணிக்குள் வரக்கூடாது என்பதற்காக உளவுத்துறை மற்றும் ஜால்ராக்கள் மூலம் வெளியே பரப்பிவிடப்பட்ட பொய்க்கருத்துக்கள் புஸ்வாணமாகி அ.தி.மு.க. தே.மு.தி.க. பேச்சு வார்த்தை துவங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டாலும் அது வெறும பொம்மை குழுதான் என்பது அனைவருக்கும் தெரியும். முக்கிய சூத்ரதாரி ராகுல்காந்தி என்பதுதான் தற்போது தி.மு.க.வினருக்கு கடும் எரிச்சலை தாக்கூடிய விவகாரம். கருணாநிதிக்கு சோனியாகாந்தி அப்பாயிண்ட்மெண்ட் தராமல் டெல்லியில் இழுத்தடித்தற்கு ராகுல்காந்தியும் பேச்சில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தான் என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. அந்த சந்திப்பில் ராகுல்காந்தி மட்டுமே பேசியதாகவும் 78 தொகுதிகளின் பெயர் பட்டியலை வாசித்த ராகுல்காந்தி காங்கிரஸின் செயல் திட்டபணிகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸின் பிரதான நிபந்தனையே ஒரு எம்.பி தொகுதிக்கு 2 எம்.எல்.ஏ தொகுதி வீதம் 78 தொகுதிகள் துணை முதல்வர், காங்கிரஸ் தலைமையில் ஸ்டியரிங் கமிட்டி 5 முக்கிய மந்திரி பதவிகள் என்ற காங்கிரஸின் நிபந்தனையை கேட்ட தி.மு.க. வினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
அதன் வெளிப்பாடே நேற்று முன்தினம் கூட்டணி பேச்சு வார்த்தைப்பற்றி பேசிய கருணாநிதி 234 தொகுதிகளையும் காங்கிஸார் கேட்கிறார்கள் என்று நிருபர்களிடம் எறிந்துவிழுந்தார். தி.மு.க. தரப்பில் கூடுதலாக 55 முதல் 60 சீட்டுகள் வரை தரமுடியும் என்று கூறினாலும் காங்கிரஸ் அதை ஏற்று கொள்வதாக இல்லை. தங்களை கேட்காமல் பா.ம.க.வை சேர்ந்ததுமல்லாமல் ஒரு எம்.பி கூட ஜெயக்காத பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுங்கியுள்ள தி.மு.க.வை காங்கிரஸ் மன்னிக்க தயாராக இல்லை. கூட்டணியில் பலம் பொறுந்திய இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸுசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கித்தான் தீரவேண்டும் என்று சோனியாவும் ராகுலும் உறுதியாக உள்ளனர். மேலும் தி.மு.க.வை மெஜாரிட்டி இல்லாத அளவுக்கு தொகுதிகளில் நிற்க்கவைத்து அதன் மூலம் ஆதிக்கம் செலுத்தலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸை பகைத்து கொண்டு வெளியேறினால் தலைதப்பாது என்று தி.மு.க.வுக்கு பிரச்சனை என்பது கருணாநிதிக்கு தெரியும். மேலும் மத்தியில் அதிகாரத்தில் இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால் செல்லாக்காசாகி விடுவோம் என்பதும் கருணாநிதிக்கு தெரிந்திருப்பதால் இருதலை கொள்ளி எறுப்புபோல தவித்து கொண்டிருக்கிறார்.
மறுபுறம் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதும் கேள்வி குறியாக உள்ளது. திருமாவளவனுக்கு பலவகைகளில் உதவி வரும் வெளிநாட்டு வாழ்தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதா என்று நெருக்குதல் தருவதால் அணிமாறும் உத்தேசத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது காங்கிரஸ் கேட்பது ஏதோ புதிதாக கேட்கும் விஷயமல்ல 1980 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி இடம் கொடுத்து நின்றவர்தானே கருணாநிதி இப்ப ஏன் தயங்குகிறார் என்று காங்கிரஸ் தரப்பில் கேட்கின்றனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாறிகிடக்கும் தி.மு.க.வை வேறு தூக்கி சுமக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பினர் பேசிக் கொள்கின்றனர்.
ஐவர் குழுவினருடன் என்ன பேசுவது நான் டெல்லிக்கே நேராக பேசுவேன் என்று மீண்டும் சோனியாவிடம் பேசுவதற்காக நல்ல சிக்னல் கிடைக்கும் என்று தன்மகள் கனிமொழியையும் டி.ஆர்.பாலுவையும் அனுப்பி சோனியாவிடம் கருணாநிதி பேசி பார்த்தார். ஆனால் எதுவாக இருந்தாலும் ஐவர் குழு மூலமே எங்கள் தரப்பு கருத்துக்களை கூறுகிறோம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் பொறியில் அகப்பட்ட எலிபோல மாட்டிக்கொண்டு கருணாநிதி விழிக்கிறார். கருணாநிதியின் ராஜதந்திரம் எல்லாம் டெல்லியில் எடுபடவே இல்லை. என்ன செய்வது ஸ்பெக்ட்ராம் பணமும் வேண்டும் பழைய அதிகாரமும் வேண்டும் என்றால் நடக்குமா கருணாநிதி மறந்துபோன ஒரு வசனம் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. கருணாநிதி தற்போது உள்ள நிலையில் தன் குடும்பத்தை காப்பாற்ற கழகத்தை அடகுவைத்துதான் தீரவேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்