எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 4 - இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக பொருளாதார தடை ஏற்படுத்தும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. இளஞைர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் ஜெயலலிதா அரசு நலத் திட்டங்களை துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாக வினியோகிக்கவேண்டியும், பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டியும் ஆலோசனைக் கூட்டம் நேற்று அ.தி.மு.க. தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்ட நிகழ்சிகளுக்கு கழக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பாசறை இணை செயலாளர் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ. வரவேற்றார். இதில் அ.தி.மு.க அவை தலைவர் இ. மதுசூதனன், கழக அமைப்பு செயலாளர்கள் சி. பொன்னையன், டாக்டர். விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்கள் . மேலும் கழக அமைப்புச் சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர்கள் ஆர். கமலக்கண்ணன், டாக்டர்.கே.எஸ்.சதீஸ்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தார்கள்.
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண். 1
தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, அமோக வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கழக இளைஞர் மற்றும், இளம்பெண்கள் பாசறை வணங்குகிறது.
தீர்மானம் எண். 2
குடும்ப ஆட்சி, ஸ்பெக்ட்ரம் ஊழல், கூட்டுக் கொள்ளை அதிகார திமிர், ஆணவப் போக்கு என்று சர்வாதிகார வெறியோடு தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்த வஞ்சகராம் கருணாநிதியையும், அவரது கும்பலையும் வேரடி மண்ணோடு சாய்த்து, தமிழகத்திற்கு கொடுங்கோலர் கருணாநிதி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று தந்ததோடு, தன்னலம் பாராது மக்கள் நலனை மட்டுமே மனதிலே ஏற்று மக்களுக்காக மக்கள் ஆட்சி நடத்திட, வள்ளலுக்கு எல்லாம் வள்ளலாக திகழும், வாழும் வள்ளல் முதல்வருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை வணங்கி தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம் எண். 3
தாலிக்கு தங்கம், பெண்களுக்கு திருமண உதவி, மாணவ சமுதாயத்தினருக்கு மடி கணினி, இலவச அரிசி என்று அனைத்து பிரிவு மக்களுக்கும் பயன்தரும் வண்ணம் தேனினும் இனிய திட்டங்கள் பல தந்து சிந்தை மகிழ நல்லாட்சி நல்கிடும், தங்கத்தாரகை, சுயநலம் பாராத சொக்கத் தங்கம், என அறிவித்த முதல்வருக்கு இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இந்த இனிய தருணத்தில் நன்றியுடன் வணங்குகிறது.
தீர்மானம் எண்.4
தமிழனத் தலைவனென்று, தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் தமிழின விரோதி கருணாநிதி ஆட்சி காலத்தில் உலகத் தமிழனிலிருந்து உள்ளூர் தமிழன் வரை கேட்க நாதியற்று லட்சக்கணக்கில் கொல்லப்பட்டப்போது வாய்மூடி மெளனியாக இருந்து உண்ணாவிரத நாடகம் நடத்தி உள்ளம் மகிழ்ந்த தன்னல வெறியார் கருணாநிதியை கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் எண்.5
உலகில வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் பாதுகாப்பு கவசமாகவும், பாசம் காட்டும் தாயாகவும் விளங்கிடும் முதல்வர் ஜெயலலிதா வல்லரசு நாடுகள் உட்பட, வளர்ந்து வரும் நாடுகள் வரை வாயார புகழும் வண்ணம் தமிழின விரோதி லட்சக்கணக்கில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும். மேலும், இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் அமோக ஆதரவோடு நிறைவேற்றியதோடு, துரோகி கருணாநிதியின் சுயநலத்திற்காக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட தமிழர்களின் சொந்த மண் கச்சத்தீவை தமிழகத்திற்கு திரும்ப பெற்று, தமிழக மீனவர்களை காப்பாற்றிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போட்ட சிங்க நிகர் துணிவு கொண்ட முதல்வரை கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை நன்றியுடன் வணங்குகிறது.
தீர்மானம் எண்.6
தமிழக முதல்வரின் சீர்மிகு திட்டங்களையெல்லாம் துண்டு பிரசுரமாக அச்சிட்டு, கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை பள்ளி, கல்லூரிகளிலும், பட்டி தொட்டியெங்கும் இனிப்பு வழங்கி வீடு வீடாக விநியோகித்து சரித்திரம் போற்றும் திட்டங்கள் அனைவரும் அறியும் வண்ணம் பிரச்சாரம் செய்வதென்றும், அதே வேளையில் பாசறையில் புதிய உறுப்பினர்களை லட்சக்கணக்கில் சேர்ப்பதென்றும் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை இந்த இனிய நேரத்தில் உறுதி ஏற்கிறது.
தீர்மானம் எண்.7
தி.மு.க., காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மத்திய அரசின் மக்களை வஞ்சிக்கும் செயலான பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணை விலை உயர்வை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கா வண்ணம் தமிழக அரசின் வரி விதிப்பை nullக்கி மக்களுக்கு நேசக்கரம் nullட்டிய பாசத்தாயிக்கு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நன்றி தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.