எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 6 - மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். முதல்வராக பதவி ஏற்ற பின்பு ஜெயலலிதா இரண்டாவது முறையாக இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்தில் முந்தை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தேவையில்லாத செலவு, ஊழல் ஆகியவைகளின் காரணமாக தமிழகத்தை பெரும் கடனாளி மாநிலமாகிவிட்டது. புதிய தலைமை செயலகம் கட்டுவதாக கூறி ரூ. 1000 கோடி வீணாகிவிட்டதாக தெரிகிறது. இவ்வளவு செலவு செய்தும் அங்கு சட்டசபை கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாமல் அவைகள் முடங்கிப்போய் கிடந்தன. மின்சார உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்குடன் இருந்ததால் தமிழகத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மின்தட்டுபாடு நிலவியது. இதை போக்க வேண்டுமென்றால் மின்சார உற்பத்தியை பெருக்க பெருமளவு நிதி தேவைப்படுகிறது. இந்தநிலையில்
மத்திய திட்டக்குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த முதல்அமைச்சர் அல்லது அவர்கள் சார்பில் நிதி அமைச்சர் கலந்துகொள்வார்கள். அவர்கள் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களுக்கும் அடுத்து செயல்படுத்தப்பட உள்ள நலத்திட்டங்களுக்கும் தேவையான நிதி மற்றும் மத்திய அரசு வழங்கும் நிதி குறித்து கூட்டத்தில் வலியுறுத்துவார்கள்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் முதலாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் 2011-2012ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான (2011-2012) திட்டக்குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்குமாறு திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை அவர் வலியுறுத்தி கேட்டுக்கொள்வார். கடந்த நிதி ஆண்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி ஒதுக்குமாறும் முதல்அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்அமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற பிறகு முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 14ந் தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்திற்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதோடு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மானியம் தேவை என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மோனோ ரெயில் திட்டம், தமிழக நதிகள் இணைப்பு, சிறப்பு பொதுவினியோக திட்டம் உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்திட மத்திய அரசு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், தற்போது, 2-ம் முறையாக முதல்அமைச்சர் ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை டெல்லி செல்லும் அவர், மாலையே சென்னை திரும்புகிறார். அவருடன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோரும் உடன் செல்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்38 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 3 hours ago |
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்
15 May 2024புதுடெல்லி : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: ஆந்திராவில் 6 பேர் உடல் கருகி பலி
15 May 2024அமராவதி : ஆந்திராவில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
15 May 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.