எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜூலை.12 - திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. மதுரை மாநகராட்சி சிறப்பு கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஆணையாளர் செபாஸ்டின், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் பெ.சாலைமுத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க தந்தை பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் பாடுபட்டனர். அதே வழியில் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக தந்து ஏழை மக்களின் இதயங்களின் குடியிருந்தவர் எம்.ஜி.ஆர். அதே போல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29 சதவீத கிடைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர், மத்திய அரசின் நுழைவு தேர்வுக்கு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று தலித் மக்களுக்கு உதவி செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. அதே போல் இலங்கையில் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு முகாம்களில் சித்ரவதைகளை அனுபவித்து வரும் ஈழ தமிழர்களுக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அனைத்து தரப்பு மக்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.அண்ணா பிறந்தநாளில் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய திருநாட்டில் தைரியமாக எந்த கருத்தையும் எடுத்துச்சொல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். தமிழக மக்கள் திமுகவுக்கு சாட்டையடி கொடுத்து, அதிமுகவை வெற்றி பெற செய்திருக்கிறார்கள். இவ்வாறு சாலைமுத்து பேசிக்கொண்டிருக்க, திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து பேசிய சாலைமுத்து, திமுகவினர் தண்டனை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. கண்மாயில் 20 ஏக்கர் நிலத்தை திமுகவினர் ஆக்கிரமித்து உள்ளனர். இதன் மீதெல்லாம் அரசு நடவடிக்கை எடுக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எங்கு பார்த்தாலும் மீன்கடைகளாக காட்சியளிக்கிறது. துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இந்த கடைகளுக்கு மாநகராட்சி முறையாக அனுமதி அளித்துள்ளதா? திமுகவில் இருந்த செல்லத்துரை என்பவர் புதிய சென்ட்ரல் மார்க்கெட்டில் 36 கடைகளை பெற்றுள்ளார்.
மாநகராட்சி சார்பில் விடப்படும் கடைகள் ஏழைமக்கள் பிழைப்புக்காகாதான் விடப்படுகிறது. ஆனால் இப்படி தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக விடப்படுவது கண்டிக்கத்தக்கது. மதுரை நெல்பேட்டையில் ஆடு வதை கூடத்தை தனிநபர் வற்புறுத்தலின் பேரில் மாற்றப்பட்டுள்ளது. அதே இடத்தில் மீண்டும் ஆடு வதை கூடம் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது முறைகேடாக நடந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நானோ, சம்பந்தப்பட்ட அமைச்சரோ தலையிடமாட்டோம். துணை மேயர் தனது மனைவி பெயரில் ஒரு காம்பள்க்ஸ் கட்டி வருகிறார்.இது மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆணையாளர்:- இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி இருப்பதால் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு விலக்கப்பட்டதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து துணை மேயர் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று சத்தம் போட்டனர். இதன் பிறகு சாலைமுத்து பேசியதாவது, மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் பெயரில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுடுகாடு அருகில் கட்டிடம் கட்டக்கூடாது என்று விதி முறை உள்ளது. விதிமுறையை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஒரு மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வரின் மகன் இப்படி மாநகராட்சி விதியை மீறலாமா? என்றார். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும். அவரது சகாக்களும் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக, கம்யூனிஸ்ட்கட்சியினர், தேமுதிகவினர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விசாரணை கமிஷன் வேண்டும் - மார்க்சிய கம்யூ.வலியுறுத்தல்
மாமன்ற கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குழு தலைவர் கணேசன் பேசும் போது, மாநகராட்சி முலம் நடந்த ரிங்ரோடு வசூல், எகோ பார்க் கட்டணவசூல், சென்ட்ரல் மார்க்கெட் டெண்டர் விட்டது, ராஜாக்கூரில் வீடுகள் கட்டியதில் முறைகேடுகள்,தரமற்ற சாலைகள், ஒப்பந்த ஊழியர்கள் நியமித்ததில் முறைகேடு, மாநகராட்சி சொத்து அபகரிப்பு போன்றவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். திமுகவினரின் முறைகேடுகளுக்கு துணை போன மேயர் தேன்மொழி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
காங்கிரஸ் சாதிக்க முடியாததை பாரதிய ஜனதா சாதித்துள்ளது : மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
30 Apr 2024மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் 60 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை பா.ஜனதா 10 ஆண்டுகளில்