எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், ஜூலை - 18- டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த தேதியை இன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது. சமீபத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் லாரிகளின் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாய நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். லாரிகளின் வாடகை கட்டணத்தை உயர்த்தினால் அத்யாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமிய கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் என்று அஞ்சிய மத்திய அரசு, மோட்டார் காங்கிரஸ் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்து பேச்சு நடத்தியது.
கடந்த மாதம் 27 ம் தேதி இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்தது.
மத்திய தரைவழி போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ஜூலை 17 ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தங்களது வேலை நிறுத்த போராட்டம் குறித்த தேதியை ஜூலை 18ம் தேதி அறிவிக்க இருப்பதாக மோட்டார் காங்கிரஸ் கூறியிருந்தது.
அதன்படி மோட்டார் காங்கிரஸ் அளித்த கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
ஆனால் மத்திய அரசிடமிருந்து இது வரை எந்த சாதகமான பதிலும் வரவில்லை. அதனால் அகில இந்திய மோட்டார் காங்கிரசின் கூட்டம் நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், குஜராத் , மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வு, லாரிகள் மீதான இன்சூரன்ஸ் பிரீமிய கட்டண உயர்வு , டோல் கேட்டுகளில் சீரற்ற கட்டண விதிப்பு போன்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் எந்த தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தீர்மானத்தின்படி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்த தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டு சம்மேளன தலைவர் நல்லதம்பி பெங்களூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போராட்ட தேதி அறிவிக்கப்பட்டால் அந்த தேதியிலிருந்து நாடு முழுவதும் 70 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும். இதனால் பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்டிரைக்கினால் அத்யாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் என்ற அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தம் செய்தால் தாங்களும் அந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாக தனியார் பஸ் மற்றும் வேன் உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணுமா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.