எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.21- சேலம் அங்கம்மாள் காலனி நில விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 10 பேரை பிடிக்க 12 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க.ஆட்சிகாலத்தில் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்த 31 குடும்பத்தினரை ஒரு நாள் திடீரென நள்ளிரவில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் அவர்களை அடித்து விரட்டி சொற்ப தொகை கொடுத்து மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர். பின்னர் அந்த நிலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் கவுசிக nullபதி பெயரில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர் .ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஜட்ஜ் அமைச்சர் வீராபண்டி ஆறுமுகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டும் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. இந்த நில விவகாரத்தில் அப்போதைய அரசு அதிகாரிகள் அனைவரும் அமைச்சருக்கு ஆதரவாகவே இருந்தனர்.
கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க.ஆட்சி அமைத்தால் நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு அபகரித்தவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதே போல் சேலத்தில் பிரச்சாரத்திற்கு வந்த போதும் அங்கம்மாள் காலனி நிலம் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் பேசினார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நில மோசடிகளை விசாரிக்கவே தனிப்பிரிவை ஏற்படுத்தினார். மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் தனிப்பிரிவு போலீசாரிடம் வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பாதிக்கப்பட்ட அங்கம்மாள் காலனி பொதுமக்கள் கலெக்டரிடம் தங்கள் நிலத்தை மீட்டு தங்களுக்கு வழங்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மகரnullஷணம் மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திற்கு பரிந்துரை செய்தார். அவர் இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்கள் இந்த வழக்கை விசாரித்து அங்கம்மாள் காலனி நில அபகரிப்பில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 147( அத்துமீறல்), 148 பயங்க ஆயுதங்களால் கலகம் விளைவித்தல்) 447(அத்துமீறி உள்ளே நுழைதல்), 109 (குற்றம் செய்ய தூண்டுதல்), 467(நம்பிக்கை மோசடி), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய ஏழு பிரிவுகளில் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாகவும் அதில் தொடர்புடைய அவரது தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், உறவினர் கவுசிகnullபதி, காங்கிரஸ் பிரமுகர்கள் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, உலக நம்பி, தி.மு.க.கவுன்சிலர் ஜிம் ராமு, ஆட்டோ முருகன், பீடாகடை கனகராஜ், சித்தானந்தம் கறிக்கடை பெருமாள், அப்போதைய சேலம் ஆர்.டி.ஓ.பாலகுருசாமி, அப்போதைய பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகிய 13 பேர் மீது நேற்று முன் தினம் இரவு வழக்கு பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, ஆட்டோ முருகன், பீடா கடை கனகராஜ் ஆகியோரை நேற்று முன் தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.
இதே போல் சேலம் 5 ரோட்டில் உள்ள சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே பிரிமியர் ரோலர் மில்ஸ் சொந்தமான நிலம் இருந்தது. இதன் பங்குதாரர்களாக கே.வெங்கடாஜலம், வி.ரவிச்சந்திரன், வி.வேணுகோபால், வி.பாலாஜி ஆகியோர் இருந்தனர். இந்த நிலத்தின் பேரில் வெங்கடாஜலம் என்பவர் ரூ.3 கோடிக்கு பவர் எழுதிக் கொடுத்து ஆடிட்டர் துரைசாமி என்பவரிடம் ரூ.3 கோடி கடன் வாங்கியிருந்தார். அதற்கான வட்டி தொகையையும் கொடுத்துவந்துள்ளார். பின்னர் நிலத்தை மீட்க செல்கையில் அவர் நிலம் தரமுடியாது பவர் எழுதிக்கொடுத்ததால் நிலம் எனக்கு சொந்தம் என கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அப்போதைய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் இதில் தலையிட்டு வெங்கடாஜலத்தை மிரட்டியுள்ளதாக தெரிகிறது. பின்னர் அந்த நிலத்தை சேலத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அவரது மகன் ராமநாதன், மனைவி ராஜேஸ்வரி உள்ளிட்டோருக்கு ரூ.30 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். அதில் சொற்ப தொகையான 7 கோடியை வெங்கடாஜலத்திற்கு கொடுத்துவிட்டு மற்ற பணத்தை வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பலர் பங்கிட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த வெங்கடாஜலம் இறந்தே போனார்.
இந்த நிலையில் வெங்கடாஜலத்தின் மகன் ரவிச்சந்திரன் என்பரும் இந்த நிலம் அபகரிப்பு குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்திடம் புகார் கொடுத்தார். அவர் இது குறித்து விசாரிக்க மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இந்த நில அபகரிப்பில் தொடர்புடைய முதல் குற்றவாளியாக வீரபாண்டி ஆறுமுகம், ஆடிட்டர் துரைசாமி, அவரது மகன் அசோக் துரைசாமி,சி.துரைசாமி, பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், அழகாபுரம் தி.மு.க.செயலாளர் அழகாபுரம் முரளி, ஏ.ஆர்.ஆர்.எஸ்.சீனிவாசன், மகன் ராமநாதன், சீனிவாசன் மனைவி ராஜேஸ்வரி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.85 கோடியாகும்.
மேற்கண்ட 2 வழக்குகளிலும் வீரபாண்டி ஆறுமுகம் முதல்குற்றவாளி என்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அங்கம்மாள் காலனி நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடினர் .அவர்களிடம் போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் பிரிமியல் மில்ஸ் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இரண்டு வழக்கிலும் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களை கண்டு பிடித்து கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் இந்த வழக்குகளில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தரப்பில் சென்னை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.ஆனால் போலீசாரோ முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்குள் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க.வினர், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரி,மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்ட பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் தி.மு.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.