எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.21 - தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த சாதனைகளைப்பற்றி அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு வருகை தரவேண்டும் என அழைப்பு விடுத்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 2.10 மணிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர், மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாடினார். அரசியல் சமூக, பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு ஹிலாரி கிளிண்டன் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் பல தடைகளைக் கடந்து முதல்வர் செய்த சாதனைகளையும் அவர் பாராட்டினார். பெரும் வெற்றிக் கதைகளை கொண்ட பெரும் ஆளுமைமிக்க தலைவரான ஜெயலலிதாவுடன் பேசுவதற்கு ஙிஹிலாரி ஆவல் தெரிவித்தார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா நினைவு கூர்ந்தார். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரும் வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா திகழ்கிறது என்றும் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் சேவைகளை 200-10-ல் இந்தியா ஏற்றுமதி செய்தது. 2009-ல் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேவைகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது என்றும் எதிர்காலத்தில் அமெரிக்க சேவைகளின் இந்திய இறக்குமதி அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் பிரிவில் அமெரிக்கா முதலீடு செய்வதற்கு முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.
இதுபோன்ற தொழில்துறைகளில் தமிழ்நாடு - அமெரிக்கா இரு தரப்பும் இணைந்து பணியாற்ற முடியும். இதுகுறித்த கொள்கையை உருவாக்குதல், சிறு மற்றும் மத்திய நிறுவனங்களை பயன்படுத்துதல், உலக சப்ளை சங்கிலி நிர்வாக முறைமையை ஆட்டோமோட்டிவ் துறையில் பலப்படுத்தல் குறித்து முதல்வர் விவாதித்தார்.
சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள விரிவான வாய்ப்புகள் குறித்தும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
தலா 300 மெகாவாட் உற்பத்தி செய்யும் 10 சூரிய சக்தி மின்சார பூங்காக்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளதையும் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசும் அமெரிக்க அரசும் இந்த துறையில் இணைந்து செயலாற்ற முடியும். இத்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அறிவுத்துறையில் - குறிப்பாக தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2011-2020 காலகட்டத்தில் 10 முதல் 12 மில்லியன் பணிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 4 மடங்காக உயரும் என்பதால் அது உறுதிபடுத்தப்படும். இது அறிவுத்துறையை மேம்படுத்த தமிழக அரசும், அமெரிக்க அரசும் கைகோர்த்து செயல்பட முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுபோன்ற இணைந்த செயல்திட்டங்களில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
தொழிற்துறை வளர்ச்சியில் சாலைபோக்குவரத்து பெரும்பங்கு வகிக்கின்றது. 2.1 லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு 15-20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 2020-ம் ஆண்டு வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடுத்துக் கூறினார். சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் வாய்ப்புகள் உள்ளன. இதில் தமிழக அரசும், அமெரிக்க அரசும் இணைந்து செயல்பட முடியும் என்று முதல்வர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் ஓவர்சீஸ் பிரைவேட் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்ற தகவலை ஹிலாரி கிளிண்டன் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவின் செயல்திறனுள்ள தலைமையில் இதுபோன்ற பல பெரிய முதலீடுகளை தமிழ்நாட்டில் செய்வதற்கு அமெரிக்கா ஆர்வமாக உள்ளதாக ஹிலாரி கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் எச்.1.பி விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார். 65 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள ஒதுக்கீட்டை 1 லட்சத்து 95 ஆயிரமாக உயர்த்தவேண்டும். விசா விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும், முதல்வர் ஜெயலலிதா ஹிலாரியிடம் பேசினார். இலங்கையில் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், இலங்கை தமிழர்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பது குறித்தும், அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழ்வதற்கு முடியாத நிலை குறித்தும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்த உணர்வை பகிர்ந்து ஏற்றுக்கொண்ட ஹிலாரி கிளிண்டன், இலங்கை தமிழர்களின் முகாம்களில் இருந்து விரைவில் சொந்த வீடுகளுக்கு திரும்ப அமெரிக்க அரசு நுட்பமான - ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான தமிழக அரசின் முன்னோடி திட்டங்களை அறிய அமெரிக்க குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் பெரும் சாதனைகளை அறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்கா வருமாறு ஹிலாரி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நடைபெற்றது. அமெரிக்கக் குழுவில் துணை அமைச்சர் பாப் பிளேக், உலக பெண்கள் விவகாரத்திற்கான தூதர் மெலன்வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பீட்டர் பர்லேக், சென்னை - அமெரிக்க துணை தூதரகத்தின் ஆண்ட்ரூ டீ சிம்கின், அமெரிக்க அமைச்சகத்தின் துணை தலைமை அலுவலர் ஹியுமா ஆபிதீன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
படியில் ஏறிவந்த ஹிலாரி கிளிண்டன்
நேற்று சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் கோட்டையில் ஜெயலலிதாவை சந்திக்க வந்தபோது அவரை பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயின் வாசலில் வரவேற்று லிஃப்ட் மூலம் செல்ல அழைத்தபோது ஹிலாரி கிளிண்டன் படிக்கட்டு வழியாக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வந்தார்.
அவரை முதல்வர் ஜெயலலிதா வாசல் அருகே வந்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலாளர் தேவந்திரநாத் சாராங்கி மற்றும் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.