எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூலை.- 30 - முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவால் டோல் வரி பிரச்சனையில் லாரி உரிமையாளர்கள் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும், நாடு முழுவதும் மத்திய அரசு டோல் வரியை சீராக வசூலிக்காவிட்டால் வரும் 18 ந் தேதி நள்ளிரவு முதல் தென் மாநில லாரிகள் மற்றும் மஹாராஷ்டிராவில் 24 லட்சம் லாரிகள் ஓடாது என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். தென் மாநிலங்கள் மற்றும் மஹாராஷ்டிரா லாரி உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சேலத்தில் நேற்று காலை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமை வகித்தார்.கூட்ட முடிவு குறித்து சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது.நாடு முழுவதும் டோல்வரியை சீராக விநியோகிக்க கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற போராட்டத்தின் போது லாரி உரிமையாளர்களுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி சுங்கவரியை சீராக்குவது, 3 நபர் இன்சூரன்ஸ் 6,800 ல் இருந்து 11,800 ஆக உயர்த்தியதை மீண்டும் 6,800 ஆக குறைப்பது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு வரியை குறைப்பது. டீசல் விலையை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தவில்லை.
தேசிய பர்மிட் லாரிகளுக்கு ஆண்டிற்கு லாரி உரிமையாளர்கள் சார்பில் ரூ.30 ஆயிரம் சுங்க வரியாக செலுத்த தயாராக இருக்கிறோம். இந்த தொகையை வசூலித்தாலே ஆண்டிற்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். பிறகு ஏன் இவர்கள் தனியாரிடம் ரோடு போட சொல்கிறார்கள்.போடாத ரோட்டிற்கு சுங்கம் வசூல் செய்கிறார்கள் என தெரியவில்லை.
இந்த சுங்கம் வசூலிப்பதில் 2 ஜி ஊழலைவிட மிகப்பெரிய அளவிற்கான ஊழல் நடந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும். முன்பு மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதான் இந்த திட்டத்தை அமுல்படுத்தினார். அதன்பின் வந்த அனைத்து அமைச்சர்களும் இதை செயல்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனையில் டி.ஆர்.பாலுவை லாரி உரிமையாளர்கள் என்றும் மன்னிக்கமாட்டார்கள். இந்த சுங்க பிரச்சனை விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.
மத்திய அரசு, லாரி உரிமையாளர்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். அப்படி அமுல்படுத்தாவிட்டால் வரும் 18 ந் தேதி நள்ளிரவு முதல் தென்மாநிலங்களில் இயங்கும் 16 லட்சம் லாரிகளும்,மஹாராஷ்டிராவில் இயங்கும் 8 லட்சம் லாரிகளும் என மொத்தம் 24 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.
சுங்கவரி வசூலிப்பதில் மாநகர எல்லையில் இருந்து 10 கி.மீ.தூரத்திற்கு பிறகுதான் டோல்கேட் அமைக்கவேண்டும்.ஆனால் சேலத்தில் 10 கி.மீ.க்குள் வைத்துள்ளனர். இதே போல் டோல்கேட் அமைந்துள்ள 20 கி.மீ.சுற்றளவிற்கு உள்ள வாகனங்கள் இலவசமாக சென்று வரலாம். ஆனால் இவர்கள் உள்ளூர் வாகனங்களுக்கும் வருகின்றனர். டோல்கேட் தேவையில்லாத இடத்தில் டோல் அமைத்து வசூல் செய்து வருகிறார்.1997 ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி டோல்கேட்டில் சாலை போடப்பட்ட செலவு தொகை முழுவதும் வசூலானதும் அங்கு டோல்கேட் எடுக்கவேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆனால் 2008 ல் புதிய திருத்தம் செய்து 25 வருடத்திற்கு ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டனர்.எனவே மத்திய அரசு ஒப்பந்தத்தை செயல்படுத்தாவிட்டால் உறுதியாக போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி,மஹாராஷ்டிரா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ் கெளலி, பாண்டிச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேசவன், ஆந்திரா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கோபால்நாயுடு, சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சென்னகேசவன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.